காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கேன்சர் - குழப்பமான மனநிலை (http://www.kamalogam.com/new/showthread.php?t=71351)

நெருப்பு 12-11-18 08:40 AM

மருத்துவ உலகு எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்தது மவுனி.
பயமில்லாமல் போராடுங்கள். அதிசயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்..

manesh74 12-11-18 12:33 PM

உங்களின் படைப்புகள் காலத்தாலும் அழியாதது. அது வரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும். மனித உடல் நிலையற்றது. ஆனால் உங்கள் படைப்புகள் நிலையாக இருக்கும். உங்கள் உடல் உபாதைகள் நீங்கும். மீண்டும் வருவீர்கள்.

kprakash3516 12-11-18 01:47 PM

மௌனிக்கு,
எனது தாயார் புற்றுநோய் இரண்டாம் நிலையில் இருந்து மீண்டு வந்தவர்(வயது 74) ஆகவே பயம் வேண்டாம். இந்த நோய்க்கான மிகச்சிறந்த மருந்து தைரியம்தான். கடவுளின் அருளும் எங்கள் பிராத்தனைகளும் உங்களுடன்.

xxxGuy 12-11-18 01:55 PM

மௌனி,
உங்களுக்கு இந்த குழப்ப நிலை என்றால் நம்ப முடியவில்லை. மனம் தான் அனைத்துக்கும் காரணம் அதைத் திடமாக வைத்திருங்கள். நெகட்டிவ் சிந்தனைகளை எடுத்துக் களையுங்கள், பாசிட்டிவ்வாக சிந்தியுங்கள், எல்லாம் நல்லபடியாக முடியும் என நம்புவோம்.

நீங்கள் நமது தளத்தின் நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவர், உங்களுக்கு இல்லாத அனுமதியா! எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லுங்கள், ஒருவேளை ஏதும் பிரச்சனை என்றால் இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் "போராளி" மௌனி, அனைத்து நோய்களையும் வென்று வெற்றியுடன் வருவீர்கள். கவலை வேண்டாம். உங்களை நாங்கள் உற்சாகமாக பார்க்க விரும்புகிறோம், அதற்காக படைத்தவனை வேண்டிக் கொள்கிறோம். எல்லாம் விரைவில் சரியாகிவிடும்

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
பலவித குழப்பமான மனநிலைக்கு அப்புறம் இந்த முடிவை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு நான் ஆளாகிறேன்.

கடந்த சில காலமாகவே நான் உடல் நிலை குறைவில் இருந்தேன். கையை உயர்த்த முடியவில்லை....டைப் அடிக்க முடியவில்லை...இத்தியாதி..இத்தியாதி.

இவைகள் எல்லாவற்றுக்கும் காரணம் சர்க்கரை என்றார்கள். அதை நம்பி எல்லாம் ட்ரீட்மெண்டும் ஓடிக்கொண்டு இருந்தது. இப்போது நிஜ காரணம் தெரிந்து விட்டது. தோள்பட்டையில் கேன்சர் நோடு ஒன்று இருக்கிறதாம்...அதே போல இடுப்பில் ஒன்று இருக்கிறதாம். அதனால் நார்மல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கீமோதெரபி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

1. நண்பர்களே, நான் பிரியும் வேளை வந்துவிட்டது.

2. என் இரு கதைகள் முடிக்கப்படாமல் உள்ளது. யாராவது அதை முடித்து விடுங்கள். என் ஈ-கேஷ் பகிர்ந்து அளிக்கப்படட்டும். அவர்களுக்கு !

3. இனிமேல் என்னால் கதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.....அதனால் லோகத்துக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. முடிந்தால் என் லாக்கின் நேம்/ பாஸ் சில நாட்களுக்கு வைத்திருங்கள்....நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். இல்லையென்று நினைத்தால் அழித்து விடவும்.

மௌனி


sinna vaaththiyaar 12-11-18 04:10 PM

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தங்கள் உடம்பை கவனித்து,முறையான மருந்துகளை உட்கொள்ளுங்கள்...
தன்னம்பிக்கையே சிறந்த மருந்து..அதை கை விடாதீர்கள்....எங்கள் ஆதரவும்,பிரார்த்தனைகளும்,இறைவன் அருளும் உங்களுக்கு எப்போதும் உண்டு....

மீண்டு(ம்) வர வாழ்த்துகள் நண்பரே!!

bedroom_salak 12-11-18 04:40 PM

மௌனி அவர்களே.. உங்களால் இதிலிருந்து விரைவில் விடுபட்டு, உங்களின் நார்மல் வாழ்வு பல காலம் தொடரும்.. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
இதுவும் கடந்து போகும்..

vjagan 12-11-18 05:51 PM

விரைவிலேயே உடல்நலம் சீரடைந்து பழைய நிலைக்க்கு திரும்பி வர பிரார்த்திக்கிறேன்!

APPAS 12-11-18 07:46 PM

எல்லாம் கடந்து போகும் ..நம்பிக்கையை விடாதீர்கள்
எல்லாம் வல்ல இறைவன் என்றும் துனை இருப்பான் ....மீண்டு மீண்டும் வற காத்திருப்போம்

NamiXXX 12-11-18 10:20 PM

மௌனி அவர்களே .. நவீன மருத்துவத்தில் எதுவும் சாத்தியம் .. மனம் தளர வேண்டாம் ..

JM 12-11-18 10:25 PM

மௌனி....முக்குறியோனின் ஆலோசனையும்..... சின்ன வாத்தியரின் ஆலோசனையும், சற்று செவிமெடுங்கள்..... சரியானபடி யோசித்து நல்ல மருத்துவரை நாடுங்கள்..... இறையருளால் கண்டிப்பாக குணமாகும்....! (ஏனோ தெரியவில்லை .... வெகு நாளைக்கு பிறகு லோகத்திற்கு வந்தாலும், இந்த திரியை தாண்டி என்னால் செல்ல முடியவில்லை.....)


All times are GMT +5.5. The time now is 01:12 AM.

Powered by Kamalogam members