தங்க வாசல் அனுமதியில் மாற்றம்
நண்பர்களே/நண்பிகளே,
கடந்த சில வருடங்களாக நாங்கள் நம் தளத்தில் ஒவ்வொரு வகையான உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கவனித்து வருவதில் இருந்து ஒரு புலப் பட்ட உண்மை என்னவென்றால், ஏறக் குறைய 80% தங்க வாசல் உறுப்பினர்கள், தங்க வாசலை அடைந்த பின் அவர்களுடைய பங்களிப்பில் "தேக்க நிலை" வந்து விடுகிறது. கதைகள் படைத்து வெற்றியடைந்தவர்கள் பின்னர் கதைகள் படைப்பதையே மறந்து விடுகிறார்கள். போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசல் வந்தவர்கள் பின்னர் எந்த ஒரு போட்டிகளிலும் பங்கு கொள்வதில்லை. தங்க வாசல் வந்தடைந்த பின் அவர்கள் "விருந்தாளி" போல் இங்கு வந்து செல்கிறார்களே தவிர அவர்களுடைய பதிப்புகளும், பங்களிப்புகளும் அடியோடு குறைந்து விடுகிறது. ஆனால், ஒரு 20% உறுப்பினர்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தங்கள் பங்களிப்புகளை தொடர்ந்து வாரி வழங்கிக் கொண்டு வருகிறார்கள், அவர்களைப் பாராட்டுகிறேன், அவர்களுக்கு இந்த அறிவிப்பும், மாற்றமும் ஒரு பொருட்டாக இருக்காது என நம்புகிறேன். அதனால், இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடக் கடைசியிலும் (டிசம்பர் கடைசி வாரம்), அனைத்து தங்க வாசல் உறுப்பினர்களின் ஒரு வருட பங்களிப்புகள் தனித்தனியாக அலசப் படும். அவர்களுடைய தங்க வாசலை தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும் (தங்க வாசல் காமப் படங்கள்/காம அசைபடங்கள் பகுதியில் பதிக்கப் படும் கருத்துக்கள் கணக்கில் சேராது), அவ்வாறு செய்யாதவர்களின் அனுமதி வெள்ளி வாசல் அனுமதியாக மாற்றப் படும். மேலும், இனி மாதப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு நேரடியாக தங்க வாசல் அனுமதி கிடையாது. அவர்கள் தற்போது உள்ள அனுமதியில் இருந்து ஒரு படி உயர்த்தி கொடுக்கப் படும். அதாவது, வெண்கல வாசல் உறுப்பினர் என்றால் அவருக்கு வெள்ளி வாசல் அனுமதி கொடுக்கப் படும். புதியவர்கள் வருமுன் இந்த விதிமுறையை அறிவிப்பதன் மூலம், அவர்களின் சந்தேகம் தெளிவு பெறும், நீங்களும் அவர்களுக்கு எடுத்துரைக்க உதவியாக இருக்கும். இங்கு தொடர்ந்து பங்களித்து வரும் பல உறுப்பினர்களுக்கு இவை ஒரு பொருட்டாக இருக்காது என நம்புகிறேன். மற்றவர்களும் உங்கள் பங்களிப்பை கூட்டி நமது தளம் மேலும் சுறுசுறுப்பாக இயங்க உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி..! |
வாசகர் சவால் போட்டியிலும் கதை பதிப்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன் தலைவரே! தங்கள் மாற்றங்களுக்கு எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு! நன்றி தலைவரே!:0019:
|
உண்மையிலேயே தங்க வாசலில் உள்ள நல்ல படைப்பாளிகள் சமீப காலங்களில் கதை எழுதுவதிலையே என்று யோசிப்பேன்.
ஒரு வேலை அவர்கள் பிசியாக இருப்பார்கள் என்று நினைப்பேன். ஆனால் அவர்களின் கதைகளை படிக்க ஆவலாய் காத்து இருப்பேன் (இருக்கிறேன்). தலைவரின் முடிவு வரவேற்க தக்க முடிவுதான். நான் வரவேற்கிறேன். |
வரவேற்க தக்க மாற்றம் தலைவரே. இனி புதிய சுறுசுறுப்புடன் லோகம் இயங்கும்.
|
தள நிர்வாகி சரியாகவே கவனித்திருக்கின்றார் மற்றும் கணித்திருக்கின்றார். வரவேற்க தக்க மாற்றமே, வரவேற்கிரேன்.
|
இந்த மாற்றங்களை நான் மிகவும் வரவேற்கிறேன். தங்க வாசல் வந்தவர்களும் பங்களித்து வந்தால் தானே புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும்.
Quote:
|
இது ஒரு நல்ல முடிவு, இது அனுபவம் பெற்ற உறுப்பினர்களின் கதை பங்களிப்பை அதிக அளவில் அதிகரிக்கும். மேலும் தங்க வாசலை அடைந்து விட்டல் இனி எதுவம் தேவை இல்லை என்ற மனப்பான்மையும் நீங்கும்.
|
இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்..
ஒரு சிறிய கேள்வி - பங்களிப்பு செய்யாதவர்கள் வெள்ளி வாசலுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர்கள் திரும்ப தங்க வாசல் அனுமதி பெறுவதாயின், அது வழமையான விதிமுறையா என்பதையும் எழுதினால் பல சந்தேகங்களை தீர்க்கும் என நினைக்கிறேன். |
நல்ல வரவேற்ப்பான விஷயம் !
புதியவர்கள் வரும் முன் இதை அறிவித்து இருப்பது அருமை ! நல்ல முன்னேற்றம் ஏற்படும். பின்னர் பதித்தது ! 25 பதிப்பு என்பது ரொம்ப குறைவா தெரிகின்றது ! |
kay & oolvathiyar, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..!!
வாசகர் சவால் போட்டி நிர்வாகம் நடத்தும் போட்டி அல்ல, வாசகர்கள் வாசகர்களுக்காக நடத்தும் போட்டி. அதில் எங்கள் தலையீடு கிடையாது(காமலோகத்திற்குள் ஒரு தனியார் போட்டி போன்றது). வாசகர் சவால் போட்டியில் ஒருவரின் பங்களிப்பு, அந்த சவால் நடத்துனருக்காகவே கதை படைத்துள்ளார். அந்த வாசகர் சவால் நடத்துனரின் திறமை, அவருடைய வெற்றி. ஆனால், நிர்வாக சவால் போட்டி மற்றும் மாதந்திர சிறந்த போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் காமலோக நிர்வாகத்திற்கு உதவி செய்கிறீர்கள். மாதந்திர சிறந்த கதைப் போட்டிக்கு தான் அந்தந்த மாதம் பதிக்கும் கதைகள் அடுத்த மாதம் தானாக தகுதி பெற்று விடுகின்றன. ஆனால், நிர்வாக சவால் கதையில் ஒரு சிலரே பங்கு கொள்கிறார்கள். நிறைய பேர் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல், அதைப் பூர்த்தி செய்தால் மிக்க சந்தோகம் கொள்வோம். இந்த ஆலோசனையை முடிந்தால் அடுத்த வருடம் மறுபரிசீலனை செய்வோம். Quote:
Quote:
|
All times are GMT +5.5. The time now is 10:16 PM. |
Powered by Kamalogam members