இது பாஸ்வேர்டை பலர் தெரிய பயண்படுத்துபவர்களுக்கு ஒரு பாடம். இவர் கூறுவது போல காமலோக பாஸ்வேர்டுடன் கூடுதலாக யாகூ பாஸ்வேர்டும் திருடப்பட்டது என்பது நம்பும்படியாக இல்லை. ஆனால் அது துரதிர்ஷ்டமாக (இரண்டுக்கும் ஒரே பாஸ்வேர்டாக இருந்திருந்தால்) அம்மாதிரி நடந்த உண்மை போலவும் தெரிகிறது. தலைவர் மாற்று உதவி செய்திருக்கிறார்.
இந்த திரி ஆரம்பித்தவர் கூறுவது உண்மையா இல்லையா என்று தற்போது (குற்றம் சாட்டப்பட்ட) குறிப்பிட்ட பெயரை உப்யோகிக்கும் உறுப்பினர் தான் கூற வேண்டும். அவர் கருத்தையும் கூறும் வரை அவர் கணக்கை நிறுத்தி வைக்க கூடாது. இந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்தவர் போல் எனக்கு படுகிறது. ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். தளத்தில் ஒருவரே இரு கணக்கு மேலாண்மை செய்தது போததென்று இருவர் ஒரு கணக்கை சொந்தம் கொண்டாடுவது பற்றி செய்தி வியப்பாக இருக்கிறது. தலைவர் அவர்களுக்கு இருக்கும் தள வேலை பத்தாதென்று இம்மாதிரி தொல்லைகள் வேறு. ஒருவரின் அஜாக்கிரதை எவ்வளவு பேருக்கு சிரமம் பாருங்கள். |
அட இது நிஜம்தான்... சமீபத்தில் என்னுடைய ஐடியில் யாரோ நுழைய முயற்சித்து ஐபி அட்ரஸ் காட்டிக்கொடுத்துவிட்டது. நல்லவேளை தலைவர் உடனே எனக்கு தனிமடல் இட்டு எச்சரித்தார். எனவே பாஸ்வேர்ட் திருடவும் வாய்ப்புக்கள் இருக்கலாம். வேறு யாராவது டெக்னிக்கல் பிஸ்துக்கள் இது சம்பந்தமாய் விளக்கம் கொடுத்து உதவலாம்....
|
காமலோகம் தளத்தை முறைப்படி லாக் அவுட் செய்யாமல் ப்ரவுசரை நேரடியாக குளோஸ் செய்தாலோ அல்லது எதிர்பாராமல் கணினி ஷட்டவுன் ஆகிவிட்டாலோ, அந்த கணினியில் ப்ரவுசரில் காமலோக தள முகவரியை உள்ளிட்டு என்டர் செய்தால் லாக் இன் செய்யப்பட்ட பக்கம் லாக் இன் செய்யாமலே வந்து விடுகிறது. இது ஒரு தொழில்நுட்ப குறையே. (குறிப்பிட்ட கால அளவில் ஏதும் நடவடிக்கை இல்லையெனில் செஷ்ஷன் காலாவதியாகி தானே கணக்கு லாக்அவுட் செய்யப்படவேண்டும்.)
முதலில் எனது யாகூ பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்க வேண்டும், அதன் மூலம் காமலோக விபரமறிந்து என் பெயரில் பதிவுகள் இடப்பட்டன. (யாகூ கா.லோ இரண்டுக்கும் ஒரே பாஸ்வேர்ட்தான் வைத்திருந்தேன்).இதை கவனித்து முதலில் தலைவருக்கு பி.எம் மூலம் தெரிவித்தேன். அதன் விபரம்: //மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு! நான் கடந்த அக்டோபர் 11 முதல் இன்று (நவம்பர் 11) வரை விடுப்பில் சென்றிருந்தேன். இடைப்பட்ட நாட்களில் காமலோகத்திற்கு வரவில்லை. அக்டோபர் 20 மற்றும் நவம்பர் 7 ஆகியதேதிகளில் நெட்கபேயில் லாக் செய்து விட்டு உடனே லாக் அவுட் செய்துவிட்டேன். இன்று லாக் செய்து எனது படைப்புகளையும் பதிவுகளையும் பார்வையிட்டபோது நான் பதியாத சில புதிய பகுதிகள் என் பெயரில் பதிந்திருக்கக்கண்டேன். என் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து உடன் பாஸ்வேர்டை மாற்றினேன். தங்களுக்கும் தனிமடலிட்டேன். தலைவரவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். என் பக்கம் ஏதும் தவறிருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.// அதற்கு தலைவரின் பதில்: //நண்பரே, தெரியப் படுத்தியதற்கு நன்றி.. அதனால், தான் அனைவரையும் மிகக் கடினமான பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ள அறிவுறுதுகிறோம். இனிமேலாவது கவனமாக இருங்கள், இந்த செய்தியை மற்றவர்களுக்கும் கூறி, எச்சரிக்கையாக இருக்க கூறுங்கள். எந்தெந்த பதிப்புகள் நீங்கள் பதிக்காதவையோ அவற்றின் லிங்கினை எனக்கு தனிமடலில் அனுப்புங்கள், அதன் IP முகவரியை ஆராய்கிறேன். நன்றி..// அதன் பிறகு எனது கா.லோ யாகூ இரண்டு கணக்குகளும் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டு காமலோகத்துடன் எனது தொடர்பு துண்டிக்கப்படவே காமலோகத்துக்கு தனிமெயில் அனுப்பி காத்திருந்தேன். இரண்டொருநாள் காத்திருந்தும் பதில் எதுவும் வராததால் இதயத் திருடன் என்ற புதிய கணக்கு தொடங்கி இப்பதிவை இட்டேன். அதன் சுட்டி: http://www.kamalogam.com/new/showthread.php?t=28651 அதன் பிறகும் பதில் ஒன்றும் வராததால் இதயத்திருடன் என்ற பெயரிலேயே எனது இரண்டாவது பதிவு இட்டேன். அதன் சுட்டி: http://www.kamalogam.com/new/showthread.php?t=28677 அந்தத்திரிக்கு கைமேல் பலன் கிடைத்தது. தலைவர் என் புதிய ஜிமெயிலுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்து மெயில் ஐடியை அப்டேட் செய்து வெண்கல வாசல் வரை வந்துவிட்ட என்னை தற்காலிகமாக தமிழ்வாசல் வரை அனுமதித்தார். மீண்டும் அனுமதி கிடைத்ததும் மேற்கண்ட அதே திரியில் டுபுக் என்ற பெயரில் எனது கமென்டை பதிவு செய்தேன்.(அதுவரை வில்லியைத்தவிர வேறுயாரும் என்னை ஆதரிக்கவில்லை..எனவே வில்லிக்கு நன்றி தெரிவித்து) மீண்டும் வெண்கலவாசல் அனுமதி கேட்டு ஒரு திரி தெடங்கினேன். தலைவர் தனி மடலில் நான் ஏற்கெனவே தண்டனையை அனுபவித்து விட்டதால் மேலும் தண்டிக்கும் எண்ணமில்லை என்று பதிலளித்திருந்தார். http://www.kamalogam.com/new/showthread.php?t=28731 எல்லா பிரச்சினைகளும் முடிந்ததும் எனது அனுபவங்களை மற்ற உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திரியில் இட்டிருக்கிறேன். அதன் சுட்டி: http://www.kamalogam.com/new/showthread.php?t=28747 //இந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்தவர் போல் எனக்கு படுகிறது. ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.// இதயத்திருடனும் நானே டுபுக்கும் நானே! //தளத்தில் ஒருவரே இரு கணக்கு மேலாண்மை செய்தது போததென்று இருவர் ஒரு கணக்கை சொந்தம் கொண்டாடுவது பற்றி செய்தி வியப்பாக இருக்கிறது.// இதை தலைவருக்கு விளக்கி விட்டேன். தவறை உணர்ந்து எனது பதிவிலும் இத்தகவலை இட்டிருந்தேன். //காமலோகம் மற்றும் இ-மெயில் இரண்டையுமே திறக்க முடியாவிட்டால் புதிய மெயிலிலிருந்து தளத்துக்கு விளக்கமாக எழுதி பதில் வரும்வரை பொறுமையாக காத்திருக்கவும். காமலோகத்தில் புதிய கணக்குகள் எதுவும் திறக்க வேண்டாம்.// தலைவர் அவர்கள் அந்த போலி ஆசாமியுடன் தொடர்பு கொண்டதையும் எனது இதயத்திருடன் என்ற கணக்கை பின்னர் நீக்கி விடுவதாகவும் கூறி எனக்கு வாழ்த்து கூறி இப்பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. இதெல்லாம் நடந்தது நவம்பர் 2006-ல் . நான் எனது பழைய டுபுக் என்ற கணக்கிலேயே தொடர்ந்து இருந்து வருகிறேன். பிரச்சினைக்குறிய காலம் : 11 அக்டோபர் முதல் 11 நவம்பர் வரை புதிய கணக்கு தொடங்கியது 12 நவம்பரில் மீண்டு(ம்) வந்தது: 14 நவம்பரில் அதன் பிறகு நான் இதயத்திருடன் என்ற கணக்கை உபயோகிக்கவில்லை. அது இதுவரை நீக்கப்பட்டிருக்கும் என்றே நினைத்திருந்தேன்.இந்த விளக்கங்கள் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். எஞ்சி நிற்பது ஒரு கேள்வி மட்டுமே..! மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை தூஸி தட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? விளக்குவீர்களா? |
நண்பர் டுபுக் அவர்களே,
உண்மை அறியவே நான் மேலெ கருத்து எழுதினேன். பழைய பதிவை எடுத்து கிளறியது நான் இல்லை. நண்பர் ஒருவர் (03-03-07, 10:24 AM மச்சக்காளை)நீங்கள் பதிந்த இரண்டு திரியில் ஒன்றை பார்த்து (மற்றொன்று Threads Jail தேவையற்ற, விதிமுறை மீறிய பதிப்புகளின் சிறையில் http://www.kamalogam.com/new/showthr...ல் தாமதமாக (இந்த திரியில் 2வதாக பதிந்திருக்கின்றார்). நானும் அதை new postல் கண்டு 03-03-07, 10:59 AM உடனே பதிந்தது தான் அது. நீங்கள் உங்கள் ஒரிஜினல் அக்கவுண்டை கைப்பற்றியவுடன் நிர்வாகத்திற்கு உங்கள் இதயதிருடன் அக்கவுண்டை முடக்கச்சொல்லி இருந்தாலோ அல்லது இதே திரியில், ஒரு கவிதை ஆரம்பித்து (http://kamalogam.com/new/showthread....299#post412299) பின் கருத்து பதிந்தீர்களே அதே போல செய்திருந்தால். இப் பிழை ஏற்பட்டிருக்காது. முழுக்கதையும் உங்கள் பதிலுக்கு பிறகு தான் தெரிந்தது. அதற்கு தான் உங்கள் பதிலை எதிர்பார்த்தேன். இந்த திரியையும் குப்பைக்கு அனுப்ப ஆவன செய்கிறேன். நீங்கள் இனி அந்த இதயதிருடன் கணக்கை தொடாதீர்கள், அது தன்னாலே காலவதியாகி விடும். உங்கள் தள லாக் -இன் லாக்-அவுட் பற்றிய கருத்து தவறானதாகும். Quote:
பப்ளிக் (பிரவுசிங் செண்டர், நெட் கபே மற்றும் நமக்கு மட்டும் சொந்தமில்லாத அடுத்தவர்களும் பயன்படுத்தும் )கம்ப்யூட்டரில் பாஸ்வேர்டு உள்ளிடு செய்யும் போது சேமிக்கட்டுமா என்று கேட்கும் போது NO என்று தான் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அந்த கம்ப்யூட்டரில் தான் இருக்கும். அதே போல இம்மாதிரி வெளி கம்ப்யூட்டர்களில் நம் வேலை முடிந்ததும், கண்டிப்பாக லாக் அவுட் செய்து திரும்ப திறந்து பார்க்க வேண்டும். உள்ளே பாஸ்வேர்டு கேட்காமல் செல்கிறதா என்று உறுதி செய்து விட்டு தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும். |
நல்லா முட்டி மோதி அனுபவப்பட்டு கலைத்துப் போய் வந்திருக்கீங்க போல தெரியுது. மீண்டும் தெம்புடன் வந்து செல்ல வாழ்த்துகள். நீங்க ஒரு வீரன் தான்.
|
வாங்க நண்பரே... வாங்க...
ப்ரெளசிங்க் சென்டரில் காமலோகம் திறந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். Logout செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை www.kamalogam.com என்று மேலே addrees barல் தட்டிவிட்டு இப்பொழுது கவனியுங்கள். அங்கே உங்கள் username, password அப்படியே இருக்கிறதா என ஒருமுறை சரி பார்த்துவிட்டு History மற்றும் Temporary Files எல்லாம் delete செய்துவிட்டு வரவும்.. |
விதவிதமான வழியில் பாஸ்வேர்ட் திருட ஆரம்பித்து விட்டார்களா ?
(ஆமா இந்த கேள்வி கேட்பது ஸ்மிதாதானே அல்லது வேறு யாரோவா ?!!) |
எதைத்தான் திருடுவது என்று ஞாயம் இல்லயா???
ஒரே பேஜாறு போங்க சார்.... |
இணையதளங்களீல் உலவும் போது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் − திருடர்கள் இருக்கிறார்கள் − ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
|
இதற்க்கு ஆன்டி (anti?) வைரஸ் எல்லாம் சரிபட்டு வராது.
ஸ்பைவேர் கார்டு இன்ஸ்டால் பண்ணிக்குங்கோ. . |
All times are GMT +5.5. The time now is 08:02 PM. |
Powered by Kamalogam members