ஸ்திரிலோலன் |
07-02-19 02:38 AM |
மொபைல் மூலமாக என்றாலும் நீண்ட பதிப்புகள் கொடுத்து பங்களிக்க விரும்பும் நண்பருக்கு பாராட்டுக்கள். நீங்கள் டபாடாக் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் பின்னூட்டம் இடும் போது ட்ராஃப்ட் வசதி வரும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், அதன் அளவு மிகக் குறைவு + சில சமயம் தானாகவே அழிந்து போகும் என்பதால் அதைத் தவிர்ப்பது நன்று. நீண்ட பதிவுகளை அவ்வப்போது சிறுகச் சிறுக சேவ் / எடிட் செய்து பதிக்க கீழ் கண்ட வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்:-
[01] நம் தளத்தில் தலைவாசலில் உள்ள வரைவுப் பணிமனையில் ஒரு திரியை ஆரம்பித்து, அதில் சிறுகச் சிறுக பதித்து, பின் தேவையான நேரத்தில், (எடிட் செய்து) மொத்தமாக காப்பி-பேஸ்ட் செய்து பதிக்கலாம்..
[02] ஜிமெயிலில் உள்ள ட்ராஃப்ட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கணினியோ (ப்ரௌஸர் மூலம்) அல்லது மொபைலோ (ஜிமெயில் ஆப் மூலம்) எங்கு வேண்டும் என்றாலும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக டைப் செய்து சேவ் செய்து கொள்ள முடியும். இதில் இரண்டு வசதிகள் உள்ளன. ஒன்று -- அலுவலகம் அல்லது ப்ரௌஸிங் சென்டர் போன்ற இடங்களில் உள்ள கணினியிலும், லோகம் நேரடியாக திறக்க முடியாத இடங்களில் கூட இதன் மூலம் டைப் செய்யலாம். இரண்டு -- மேல் சொன்ன கணினியில் இதற்கு இ கலப்பை போன்ற ஃபோனெடிக் கீபோர்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
[03] கூகுள் கீப் அல்லது முக்கியமாக எவர்நோட் ஆப் பயன்படுத்தலாம். கூகுள் கீப் மொத்தமாக 15 ஜி.பி. கொடுத்தாலும், ஒரு பதிவுக்கு வைக்கும் அதிக பட்ச லிமிட் மிகக் குறைவு. அதை விட எவர் நோட் ஃப்ரீ ஆப்பில் லிமிட் சற்று அதிகம் (60 எம்.பி. ஒவ்வொரு மாதமும்). ஒரு தமிழ் எழுத்து 2 பைட் என்றால் 60 எம்.பி.யில் 3 கோடி தமிழ் எழுத்துக்கள் எழுதலாம். கூகுள் கீப் போல எவர்நோட்டையும் கணினியில் ப்ரௌஸர் மூலம் பயன்படுத்தலாம்.
இன்னும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், விளக்கம் சொல்கிறேன்.
|