முதன் முதலாக 30,000 பின்னூட்டங்கள்...!!!
நமது காமலோக நண்பர்களுக்கு வணக்கம்...!!!
காமலோகத்தில் முதன் முதலாக 30,000 பின்னூட்டங்கள் எழுதி அனைத்து எழுத்தாளர்களையும் உற்சாகப் படுத்தும் அண்ணன் திரு.v jagan அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...!!! இச் சாதனைக்கு பின்னால் அவருடைய உழைப்பை எண்ணி வியக்கிறேன்.. வாழ்த்துங்கள் நண்பர்களே...!!! நமது லோகத்தில் முதன் முதலில் பிரம்மிப்பை ஏற்படுத்தியவர் எனது ஆசான் திரு .ஓல் வாத்தி அவர்கள்... ஓல்வாத்தியாரின் 20,000 பின்னூட்டங்களை கண்டபோது ஏற்பட்ட அதே பிரம்மிப்பே இப்போதும் எனக்கு அண்ணன் திரு.vjagan அவர்களின் இந்த பதிப்புகளை பார்க்கும் போது ஏற்பட்டுகிறது...!!! இதற்கு பின்னால் இருக்கும் அவருடைய கடுமையான உழைப்பு என் கண் முன்னால் வந்து செல்கிறது...!!! (நானெல்லாம் ஆயிரம் என்ற இலக்கை தொடுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே) பின்குறிப்பு: நமது லோகத்தில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட பங்களிப்பே முக்கியம் என்பது தலைவரின் கருத்து அடியேனின் கருத்தும் அதே...!!! |
நான் காமலோகத்தில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போதுதான் 3000 பதிப்புகளை எட்டி உள்ளேன். இதற்கு எனக்கு நாக்கு தள்ளிவிட்டது. அப்படி இருக்கும்போது நண்பர் ஜெகன் அவர்கள் 30,000 பதிப்புகளை எட்ட எவ்வளவு உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தினந்தோறும் லோகத்தில் உலாவி பதிவிடப்படும் அனைத்து கதைகளையும் மற்ற படைப்புகளையும் படித்து பின்னூட்டம் எழுதி வருகிறார். தொடரட்டும் அவரது சேவை.
நான் காமலோகத்தில் நுழைந்த நாள் முதல் அவர் எனக்கு பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்துள்ளார். நான் இந்த நேரத்தில் அதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து அவர் பங்களிப்பு செய்து அவர் படைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து மீண்டும் ஒரு சாதனை படைக்க வாழ்த்துக்கள். |
30,000 பதிவுகளா ? கேட்கும் போதே பிரமிப்பாக உள்ளதே ! மிகப் பெரிய சாதனை தான் ! அவசியம் பாராட்டத் தக்கது ! இந்த சாதனை படைத்த ஜெகன் அவர்களை இன்று பாராட்டுவதில் பெருமிதம் அடைகிறேன் ! வாழ்க அவர் தொண்டு !
|
30,000 பதிவுகளை அடைய அவர் எவ்ளோ நேரம் ஒதுக்கிருக்க வேண்டும் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது!!!
இவர் பின்னூட்டங்களால் பல நல்ல படைப்பாளர்கள் உருவாகி இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!! 2020 இல் சேர்ந்த புதியவனான எனக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைத்துள்ளார்!! இன்னும் பல நாட்கள் தரமான பின்னூட்டங்கள் கொடுத்து வளர்ந்து வரும் படைப்பாளர்களை உற்சாக படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் வி. ஜெகன் சார்!!! |
30000 பதிவுகள் என்பது மிக சாதாரன விசயம் இல்லை. முதலில் திரியை படிக்க வேண்டும், பின் பின்னூட்டங்களை பதிக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பார். சுமாராக 12 வருடங்கள். ஒரு நாளைக்கு 7 பதிவுகள் என்று கணக்கு வருகிறது. இது நிச்சயமாக இமாலாய சாதனைதான். இத்ற்கு முன்பு ஓல்வாத்திதான் அதிகப் பதிவு பதித்திருந்தார். முன்பே இதை நண்பர் ஜகன் முறியடித்திருந்தாலும் இப்பொழுது 30000 பதிவுகளுக்கு மேல் (30040) பதித்து விட்டார்.
வாழ்த்துக்கள் நண்பரே! |
பிரமிக்கத்தக்க சாதனையை செய்திருக்கும், அன்பு நண்பர் ஜெகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .மேலும் நம் தளத்தில், பல சாதனைகளைப் படைக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
|
திரு வி.ஜெகன் அவர்களின் பின்னூட்டம் இல்லாத ஒரு பதிப்பை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று தைரியமாக பந்தயம் கெட்டலாம்:003:. அந்த அளவிற்கு எல்லா பதிப்புகளிலும் அவரது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். வாழ்த்துக்கள் தோழரே. தாங்கள் மேலும் சிறப்பான பணியை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
|
நண்பர் வீ ஜெகனின் பின்னூட்டங்கள் இல்லாத பதிப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு ..
30000 பின்னூட்டங்கள் என்பதை தொட எனக்கு இன்னமும் 30 வருடங்கள் கூட ஆகலாம் .. அருமை நண்பரே தொடர்ந்து லோகத்தில் இணைந்து இருந்து எங்களை ஊக்குவியுங்கள் வாழ்த்துக்கள் |
All times are GMT +5.5. The time now is 09:54 AM. |
Powered by Kamalogam members