subbu2000 |
04-11-14 06:06 PM |
அவரது உயிர் காக்கும் பணீ தொடரட்டும்.
படைப்பாளிகளை மென் மேலும் வளர்த்துவிடும் தோட்டக்காரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்....
என்னதான் எழுது எழுதுன்னு உள் மனம் தூண்டினாலும்.....படிக்க இத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் நானெல்லாம் எழுதுகிறேன்.....படிக்க மட்டுமல்ல அதற்க்கு ருசி சொல்லும் சுவைப்போர்கள் இருப்பதால் தான் கதையின் திசையும், பயண வேகமும், எழுத்தின் முறையும் மாற்றீயமைக்கபடுகிறது.......நீங்களே சொல்லுங்கள்.......யாருக்குத்தான் ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்த பிடிக்கும்........
எனக்கு பிடித்த இந்த தளத்தில் எண்ணற்ற பின்னூட்ட வாதிகள் தங்கள் பணீயை இன்னதென்றூ தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள்.....தங்களீன் இந்த ஒரு வரி சிலிர்ப்பு.....அதன் சொந்தக்காரனை எந்த அளவுக்கு புளகாங்கிதம் அடைய வைக்கிறது அல்லது எந்த அளவு வேதனை பட வைக்கிறது என்பதெல்லாம் அடுத்தது என்ற நோக்கில் ஏராள வெளிப்படுத்தல்கள்......
ஒன்றை உணர்ந்ததும் அதன் உணர்வை வெளிப்படுத்த நிறைய பேர் விரும்புவதில்லை......ஆனால் சில கல்யாணங்களீல் சமையல் கலைஞரை தேடிச் சென்றூ உணவின் சுவையை சொல்லிச் செல்லும் என் நண்பரை இப்போதெல்லாம் மிகவும் மதிக்கிறேன்.......அவர் என்னவோ அவர் மனம் விரும்பும் வேலையை தான் செய்கிறார் ஆனால் அதை கேட்கும் மனம் எத்தனை ஆனந்த படுகிறது அவருக்கு கிடைத்த பனத்தை விட எத்தனை மன ஆறுதல், ஆனந்தம், அகமகிழ்வு.....
சமீபத்தில் தி ஹிந்துவில் நெட்டில் சுட்டது பகுதியில் படித்தது.....ஒரு இறைச்சி பதப்படுத்தும் ப்ரீசர் பகுதியில் ஒருவர் மாட்டிக்கொள்ள......போச்சுடா நம்ம கதை என்று அவர் எண்ணீக்கொண்டிருக்க, கதவை திறக்கிறார் காவலாளி......மாட்டிக்கொண்டவர் ஓடிச் சென்றூ காவலாளியை அணைக்க.....காவலாளீ கேசுவலாக சொல்கிறார்......என்னடா இது காலைல குட்மார்னிங் சொன்னவர்.....கிளம்பும் போது குட்நைட் சொல்லிவிட்டுத்தானே கிளம்புவார்......என்னடா ஆளைக்காணோமே என்றூ தேடி வந்தாராம்......பாருங்க கேசுவலா பண்ற விஷயம் எப்படி உயிர் காத்ததென்றூ.......
ஆகவே அனேக எழுத்தாளர்களீன் உயிர் காக்கும் பின்னுட்ட காவலாளீ நண்பர் காமக்கேடி(கேடியெல்லாம் இல்லை மிக நல்லவர் தான்) அவர்களை பாராட்டுவதில் மனமகிழ்வு கொள்கிறேன்.....அவரது உயிர் காக்கும் பணீ தொடரட்டும்.
|