காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கவிஞர் நா. முத்துக்குமார் திடீர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=69065)

venkat8 15-08-16 03:37 AM

இந்த துக்க செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்றேன். மிக குறுகிய காலத்தில் அதிக பாடல்களை எழுதியவர். ரஜினி நடித்த 'சிவாஜி' திரைப்படத்தில் 'பல்லெலக்கா..' பாடலும் நா முத்துகுமார் எழுதியது தான்.

சாதிக்க வேண்டிய வயது... 41 வயதில் மரணம் என்பதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

MACHAN 15-08-16 04:28 AM

என் மனைவியும் நானும் காரில் பயணிக்கும் போதெல்லாம்

“ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!”


என்ற பாடலை போடுங்க மச்சான் என்று என்னை வற்புறுத்தி மீண்டும் ரிப்பீட்டாக கேட்டு ரசித்தபடியே பயணிப்பாள்..!
நா. முத்துக்குமார் அவர்கள் எழுதிய இந்த பாடலின்மீது அவ்வளவு அலாதி பிரியம் அவளுக்கு..!

குறுகிய காலத்தில் இரண்டு தேசிய விருது பெற்றவர். 41 வயதில் மரணம். அவர் மனைவி கையிலோ 8 மாத கைக்குழந்தை..! மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அன்னாரின் மறைவு அவரின் குடும்பத்தார்க்கும் தமிழ்ப்பட உலகுக்கும் மிகப் பெரிய இழப்பேயாகும்.

HERMI 15-08-16 05:57 AM

'வெண்மேகம் பெண்ணாக' உருமாற
'ஒரு தடவை சொல்வாயா' - வசீகரா
'சுட்டும் விழிச் சுடர்' ... குருடாக
மனம் 'உருகுதே மருகுதே'....
'தெய்வங்கள் எல்லாம்' தோற்றுப்போய்.......
'ஆனந்த யாழ்' இன்று அநியாயமாய் புழுதியில்.

மது என்னும் அரக்கன் என் கவியை கொன்றதென்னவோ பாவம்..!!!???

வார்த்தையில் வடிக்கமுடியாத இழப்பு. அவரின் ஆன்மா நித்திய இளைப்பாறல் பெறுவதாக...! கவியின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Deepak 19-08-16 04:11 PM

மறைத்த பாடலாசிரியர் முத்துக்குமார் அவர் குடும்பத்திற்கு காமலோகம் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

bedroom_salak 24-08-16 07:53 PM

எனக்கு பிடித்த பாடலாசிரியர்.. அன்னாரின் மறைவு கேட்டு அதிர்ச்சியாகி...
மீண்டு வரவே முன்று நாட்களாகின..
ஆன்மா சாந்தியடையட்டும்...


All times are GMT +5.5. The time now is 01:02 AM.

Powered by Kamalogam members