தமிழில் பதிக்கா புதியவர்கள் கணக்கு முடக்கப்படும்
நண்பரே,
நம் தளத்தில் 2011-ல் புதிதாக சேர்ந்தவர்களில் பலர் இன்னும் "படிப்பாளி"களாக இருந்து வருகிறார்கள். நீங்கள் படைப்பாளியாக மாறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டீர்கள் என்று அனைவருக்கும் உணர்த்த படித்த நல்ல கதைகளுக்கு உங்களது பின்னூட்டமாவது இடுங்கள். இதுவரை பின்னூட்டங்கள் ஏதும் செய்யாதவர்களுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது (கடைசி நாள்: 10-ஜனவரி-2012). அத்துடன் நமது புதியவர்கள் சேர்க்கை முடிந்து 3 மாதம் முடிவடைகிறது. அதற்கு பின் தமிழில் பதிக்காதவர்களின் கணக்குகள் முடக்கப் படும். அதனால், "படித்தது போதும் பொங்கியெழுங்கள்", உங்கள் விரல்களிலிருந்து தரமான தமிழ் பின்னூட்டங்கள் பொழியட்டும். நன்றி.. |
புதியவர்களே எச்சரிக்கை மணி அடித்தாகி விட்டது இனிமேல் சும்மா இருக்க முடியாது தங்களது தரமான பின்னூட்டங்களை படைப்பாளிகளுக்கு கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த தயாராகுங்கள்!
|
கதைகள், மற்ற பதிப்புகளை படித்து விட்டு பின்னூட்டம் இட்டு அவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும்.
வெறுமனே கதையை மட்டும் படித்து விட்டு போக கூடாது. இதற்கு பிறகு புதியவர்கள் இனி பின்னூட்டம் இட போகிறார்கள். இல்லையெனில் அவர்களுடைய கணக்கு முடக்கப்பட்டு விடும் என தெரிவித்து விட்டார். |
புதிய நண்பர்களே/நண்பிகளே,
வாருங்கள், ஒரு சில வரிகளிலாவது பின்னூட்டமிட்டு உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். கடைசி வாய்ப்பு, நழுவினால் காத்திருந்து பெற்ற அனுமதி பறி போய்விடும். ஜாக்கிரதை! |
நண்பர்களே !
விரைவாக செயல்படுங்கள் ! சரியோ தவறோ முதலில் முயற்சி செய்யுங்கள்! நிச்சயம் உங்களுக்கு எழுதவரும் ! வாழ்த்துக்கள்! |
புதிய நண்பர்களே...
நண்பர் vjagan சொன்னது போல ஏதாவது எழுதுங்கள். பிறந்த உடன் எந்தக் குழந்தையும் எழுந்து நடப்பதில்லை. மெல்ல எழுந்து நின்று சுவற்றைப் பிடித்து நடந்து பல முறை விழுந்து தான் நடக்க முடியும். ஏதாவது எழுதுங்கள். தமிழில் எழுதுவதற்கு உங்களுக்கு உதவ ஏராளம் பேர் காத்திருக்கின்றனர். 233 |
இங்கெல்லாம் உள்ளே நுழைவதே கடினம். நுழைந்துவிட்டு சும்மா இருக்கக் கூடாது. புகுந்து விளையாடனும்.
|
வாருங்கள் வந்து படைபாளிகளை உற்சாக படுத்துங்க ! பல வாசல்கள் திறக்க இந்த பதிப்புகள் பயன் உள்ளதாக அமையும்.
|
:001::001::001::001: வாசகனாக இருப்பதில் பெருமைப் படுகிறேன்.. அவ்வப்போது பின்னூட்டங்கள் வரக் கூடும்.. அதற்காக மூளை கு"ள"ம்பியவன் .. என்ற பட்டம் ...!!:023::023::023::023::023:
நம் தளத்தில் 2011-ல் புதிதாக சேர்ந்தவர்களில் பலர் இன்னும் "படிப்பாளி"களாக இருந்து வருகிறார்கள். நீங்கள் படைப்பாளியாக மாறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டீர்கள் என்று அனைவருக்கும் உணர்த்த படித்த நல்ல கதைகளுக்கு உங்களது பின்னூட்டமாவது இடுங்கள். இதுவரை பின்னூட்டங்கள் ஏதும் செய்யாதவர்களுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது (கடைசி நாள்: 10-ஜனவரி-2012). அத்துடன் நமது புதியவர்கள் சேர்க்கை முடிந்து 3 மாதம் முடிவடைகிறது. அதற்கு பின் தமிழில் பதிக்காதவர்களின் கணக்குகள் முடக்கப் படும். அதனால், "படித்தது போதும் பொங்கியெழுங்கள்", உங்கள் விரல்களிலிருந்து தரமான தமிழ் பின்னூட்டங்கள் பொழியட்டும். |
Quote:
"வாசகர்களாக மட்டும் இருக்காமல் கண்டிப்பாக பின்னூட்டமும் பதிக்க வேண்டும் அல்லது கணக்கு முடக்கப்படும்" என்று தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கும் இந்த திரியில் "வாசகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என்ற உங்களது பதிவின் மூலமாக புதியவர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது என்ன...?:023: |
All times are GMT +5.5. The time now is 10:28 PM. |
Powered by Kamalogam members