எனது கதைகளை தொடரலாமா? வேண்டாமா?
லோகத்தின் அனைத்து நல்உள்ளங்களுக்கும் வணக்கம். எனது கதைகளான மலையோரம் வீசும் காற்று மற்றும் மா(ல்)நாடு ஆகிய இரண்டு கதைகளும் பல மாதங்களாக முடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை தொடரலாமா இல்லை அப்படியே விட்டுவிட்டு புதிய கதைகளை பதிக்கலாமா என்று குழப்பமாக உள்ளது. கதைகளை தொடர்ந்து எழுத, நேரமின்மை என்பது மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இனிமேல் கதை எழுதுவதாக இருந்தால், முழுக்கதையையும் எழுதி முடித்த பிறகு பதிக்க எண்ணியுள்ளேன். லோகவாசிகள் தங்கள் கருத்தை முன்வைக்கும்பட்சத்தில் பழைய கதைகளை தொடரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்து எதுவாகினும், சொல்லி உதவி செய்யுங்கள் நண்பர்களே... |
இரண்டு கதைகளையும் ஒவ்வொன்றாக தொடர்ந்து எழுதுங்கள் !
அவைகள் மாதாந்திர கதை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டாகும்! |
கதைகளை தொடர்ந்து எழுதுங்கள். நேரம் கிடைக்கும் போது அப்டேட் தாருங்கள். இதில் வேறு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அதனால் தொடர்ந்து எழுதுங்கள்.முதலில் மலையோரம் வீசும் காற்று கதையை முடித்து வையுங்கள்.
|
கதைகளைத் தொடருங்கள். உங்கள் மென்காமக் கதைகள் அருமையானவை.
Quote:
மலையோரம் வீசும் காற்று கதையை முதலில் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்! இந்தக் கதைகளை முடிக்கவும், தொடர்ந்து எழுதவும் வாழ்த்துகள். |
தங்களின் பொன்னான ஆலோசனைகளுக்கு நன்றி நண்பர்களே.
|
கண்டிப்பாக தொடருங்கள் நண்பரே ....புது கதையென்றாலும் சரி, பழைய கதைகளை முடித்தாலும் சரி....ரெண்டுமே லோக வாசிகளுக்கு பயன் அளிக்கும் .....
|
Quote:
Quote:
தாங்கள் கதைகளை நகர்த்தி செல்லும் விதத்தையும், கதை சொல்லும் பாணியையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். புதுக் கதையோ, பழைய கதையோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே. தொடர்ந்து அசத்திக் கொண்டே இருங்கள். |
நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து முடித்து விடுங்கள் நண்பரே .. அதன் பிறகு புதிய கதைகளை கொடுக்க ஆரம்பியுங்கள்
|
கருத்து தெரிவித்த மற்றும் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு சந்தேகம்... நிர்வாக உறுப்பினர்கள் அல்லது மூத்த உறுப்பினர்கள் யாரேனும் என் சந்தேகத்தை தீர்க்கவும்.
இந்த பதிவை எழுதும் இக்கணம் வரை, இந்த திரி 410 பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால், வெறும் 7 அன்பர்கள் மட்டும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள். அதுவாவது பரவாயில்லை... வெறும் 11 பேர் மட்டும் வாக்களித்து உள்ளார்கள். இது இயல்பாக நடக்கும் செயல் தானா... அப்போது எப்போதும் இப்படித்தான் நடக்கிறதா...? இல்லை நான் ஓவர் ரியாக்ட் செய்கிறேனா...? ஒன்றும் விளங்கவில்லை... புரிந்தவர்கள் யாரேனும் விளக்கவும். |
புதுக்கதைகளை முழுவதும் எழுதிவிட்டு படைப்பது என்ற தங்களின் முடிவு அருமை. அதனால் படிக்கும் வாசகர்களுக்கு கண்டினியூட்டி பிரச்சினை இல்லாமல் படிக்க உதவியாக இருக்கும்.
மேலும் நண்பர்கள் சொன்னது போல பழைய கதைகளையும் முடித்து விடுங்கள். |
All times are GMT +5.5. The time now is 11:08 PM. |
Powered by Kamalogam members