காமலோக 2009 சிறப்பு எழுத்தாளர்கள் விருது
வணக்கம் நண்பர்களே..! நண்பிகளே!!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! நமது தளத்தில் வருடம் தோறும் சிறப்பான படைப்புகள் கொடுத்து வரும் படைப்பாளிகளின் திறனையும் உழைப்பையும் பாராட்டி "Cool Writer" என்னும் "சிறப்பு எழுத்தாளர்" விருது வழங்கப் படுகிறது. 2009-ம் ஆண்டில் பல புதியவர்கள் தளத்தில் சிறந்த கதைகள் படைத்து அசத்தி உள்ளார்கள். அவர்கள் மத்தியில் நமது பழைய படைப்பாளிகளை மறந்து விடக் கூடாது அதனால், இந்த வருடம் 2003 மற்றும் 2004 வருடத்தில் இருந்து தொடர்ந்து உங்களை மகிழ்வித்து வரும் இருவரை தேர்வு செய்துள்ளோம். 1) முதலில் இரண்டு தங்க நெடுங்கதைகளுக்கு சொந்தக் காரரான ருத்ரன் (Rudran). இவர் சமீப காலமாக அதிகம் படைப்புகள் கொடுப்பதில்லை, ஆனால் கொடுத்தால் வித்தியாசமாக கொடுப்பார், தரமானதாகக் கொடுப்பார். இவரது 40 பாகங்கள் கொண்ட "நிலவாசுகி" மற்றும் 17 பாகங்கள் கொண்ட "இன்பவல்லி" இரண்டும் இன்னும் இவரது பெயரை பறைசாற்றுகின்றன. இது தவிர பல சிறுகதைகளையும் இயற்றியுள்ளார். இவரது காமலோக படைப்பாளி அறிமுகத்தை இங்கே சென்றும் காணலாம். அறிமுகம்: http://www.kamalogam.com/new/showthread.php?t=20586 2) அடுத்து, 2004-ம் வருடத்தில் இருந்து தொடர்ந்து கதைகள் படைத்து பங்களித்து வரும் சுப்பு2004 (subbu2004). நிர்வாக சவாலா? வாசகர் சவாலா? எந்த சவாலாக இருந்தாலும் ஏற்க தயார் என்று அனைத்திலும் தன் முத்திரையைக் குத்தி, ஆரவாரமில்லாமல் காமலோகத்தில் தன் ஆட்சியை நடத்தி வருபவர். படங்கள் பதிப்பதில் அவ்வப்போது விருப்பம் காட்டினாலும், கதைகள் பங்களிப்பில் அவர் குறை வைப்பதே இல்லை. 2004-ல் இருந்து இன்னும் தன் பங்கை தொய்வில்லாமல் செய்து வருகிறார். இவரது படைப்பாளி அறிமுகத்தை இங்கே காணலாம். அறிமுகம்: http://www.kamalogam.com/new/showthread.php?t=24515 நமது இந்த இரு "கூல் ரைட்டர்கள்" என்னும் சிறப்பு எழுத்தாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களுக்கு விரைவில் அதற்கான மெடல்கள் வழங்கப் பட இருக்கின்றன. அதன் பின் சன்மானமாக 5000 ஐகேஷ்களும் வழங்கப் படும். நன்றி..!! |
கூல்ரைட்டர் விருது பெற்ற ருத்ரனையும் சுப்புவையும் முதல் ஆளாக வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். ருத்ரன் பழைய உருப்பினர், நான் லோகத்தில் சேருவதற்க்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இரு ந்து கதை எழுதி வந்திருகிறார். இவர் கதைகளில் சிலவற்றை நான் படிக்காமல் விட்டுவிட்டது உன்மையில் ஒரு இழப்பு மாதிரி கருதுகிறேன். இனி இவர் கதைகளை தேடி படித்து விடுவேன்.
சுப்பு இவரை ரொம்ப நாளா எனக்கு தெரியாம தான் இருந்துச்சு. ஆனால் உன்மையில் இவரும் பழைய எழுத்தாளர். கடந்த இரன்டு வருடங்களா எந்த சவால் போட்டியிலும் கலந்து கொன்டு வித்தியாசமான கதைகள் படைத்து பரிசும் பாராட்டும் குவித்தவர். இவர் கதைகளுக்கு நான் ரசிகன். என்னுடைய சவால் போட்டி பின்னூட்டங்கள் வராமல் இருந்தும் அசராமல் 10 பாகம் எழுதி கடமையை செய்தவர். சுப்பு எழுதிய கதைகள் பல இருந்தாலும் எனக்கு எப்பவுமே இவர் எழுதிய பழக்க தோசம் என்ற கதை தான் அதிகம் பிடித்தது. நெத்தி அடி அடிச்ச மாதிரி எழுதி இருப்பாரு. மூத்த சிறந்த எழுத்தாளர்களை நினைவுபடுத்தி லோகத்து சிற ந்த படைப்புகளை அடையாளம் காட்டிய நிர்வாகத்திற்க்கு நன்றி ருத்தர்ன் மற்றும் சுப்பு அவர்களுக்கு மனம் திறந்த பாராட்டுகள். |
நிர்வாகத்தினரால் 'கூல் ரைட்டர்' என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ருத்ரன் மற்றும் சுப்பு2004, அவர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
|
நீலவாசுகி " ருத்ரன் ", சித்தப்பு " சுப்பு " இருவரும் கூல் ரைட்டராக தேர்வானது புத்தாண்டின் சந்தோஷமான செய்தி. அவர்களை வாழ்த்துவதில் பெரிதும் மகிழ்கிறேன்.
|
எனக்கு இவர்களை தெரியாது என்றாலும் அவர்கள் விருது பெருவதை கண்டு மகிழ்கிறென்..அவர்களை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
|
தலைவர் அவர்களால் கூல் ரைட்டர்கள் எனும் சிறப்பு எழுத்தாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் ருத்ரன் மற்றும் சுப்பு2004 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
ருத்ரன் மற்றும் சுப்பு2004 இருவரும் அவர்களது எழுத்துப் பணிக்குறிய சன்மானத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். அவர்களை வாழ்த்துவதோடு இன்னும் பல படைப்புக்களைத் தந்து எங்களை மகிழ்விக்குமாரு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
|
ருத்ரன் அவர்களின் இன்பவல்லி காமகாவியம் என்று சொல்லலாம், ஒரு பீரியட் கதையை அந்த காலத்துக்கே இட்டு சென்றவர். மிகத்திறமையானா எழுத்தாளர். அவர்களை வாழ்த்துகிறேன்.
சுப்பு அவர்கள் ஜனரஞ்சக எழுத்தாளர் தளத்தில் நீண்ட காலமாக இருப்பவர். கதைகளை எளிமையாகவும், ஜனரஞ்சகமாகவும் தரக்கூடியவர். மதிக்க கூடிய எழுத்தாளர்களில் ஒருவர் கூல் ரைட்டர் ஆன இருவரையும் வாழ்த்துகிறேன். |
கூல் ரைட்டர் விருதுபெற்றுள்ள படைப்பாளி நண்பர்கள் ருத்ரன் மற்றும் சுப்பு ஆகியோர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இவர்களை அடையாளம் கண்டு கவுரவித்து சிறப்பிக்கும் நம் தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள். |
சித்தப்பு சுப்புவுக்கும் நண்பர் ருத்ரனுக்கும் இந்த விருது சால பொருந்தும். சுப்புவின் கதைகள் எனது சவாலில் இடம்பெற்றதை நான் பெருமையாக கருதுகிறேன்.
இவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் 5000 இ.பணமா? :017: |
All times are GMT +5.5. The time now is 05:39 PM. |
Powered by Kamalogam members