பதிவுகளை திருத்துதல் 10 நாட்கள் மட்டும் - விளக்கம்
நம் தளத்திலே ஒருவர் தத்தம் பதிவுகளை அவர் இது நாள் வரை எப்போது வேண்டுமானலும் திருத்தலாம் என்றிருந்தது, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய நடைமுறைப்படி, ஒருவர் பதிந்த பதிப்பு அவரால் அடுத்த 10 தினங்கள் மட்டுமே திருத்த(எடிட்) செய்ய இயலும், பின்னர் அந்த வசதி இருக்காது.
அப்படி அவசியம் திருத்த வேண்டும் என்றால் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டு திருத்தி கொள்ளலாம். இதனால் நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் இருந்தவை களையப்பட்டது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன். 1) பதிப்பு ஆரம்பித்த ஒருவர் பின்னாளில் அதனை திருத்தி விதிமுறை மீறியதை பதிந்து விடுகிறார்கள். இது நாம் அடிக்கடி பார்க்க இயலாத திரி என்றால், பின்னர் எவரேனும் ஒருவர் பார்க்கையில் அது தெரிய வருகிறது. இதற்கு உ.தா. சர்ச்சையான கதை ஒன்றை ஒருவர் பதிந்தது தெரிந்து அதனை பூட்டி நீக்கிய பின், அந்த கதாசிரியர் அந்த கதையை கொண்டு சென்று தன் பழைய பதிப்புகள், பழைய கதைகளின் கீழே பிற்சேர்க்கையாக பதிந்து வைத்திருந்தார். இதனை பின்னர் கண்டவர்கள் சொன்ன பின்னரே நடவடிக்கை எடுக்க முடிந்தது. 2) சிலர் தவறுதலாகவோ அல்லது மனம் மாறியோ, தான் பதிந்தவற்றை நீக்கி வெற்றுப்பதிவாகவோ அல்லது நீக்கப்பட்டது என்றோ பதிந்து செல்கின்றனர். இதனால் பின்னர் அந்த திரி முழுதும் பார்ப்பவர்களுக்கு என்ன ஏது என்றே தெரிய மாட்டேன்கிறது, எனவே அந்த மாதிரி பின்னர் தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமாகிறது. 3) இம்மாதிரி பதிவுகளை பின்னர் திருத்தும் போது முந்தைய பதிவு தற்காலிகமாக பின்னர் பயன்படுத்திக்கொள்ள மென்பொருளால் சேமிக்கப்படுகிறது, இது அடிக்கடி திருத்துபவர்களால் மிக நீண்டதாகிறது. இதுவும் குறிப்பிட்ட கால அளவு தான் திருத்த முடியும் என்பதால் அந்த கூடுதல் சுமை குறைகிறது. நம் தளம் எப்போதும் கட்டுப்பாடுகளையும் புதுப்புது விதிமுறைகளையும் தானே கொண்டுவருவதில்லை, அது அவசியம் என்று கருதப்படும் போது ஏற்படுத்துவது அவசியமாகிறது. இது குறித்து உங்கள் கருத்து விமர்சனம் இருந்தால் இந்த திரியிலே தெரிவித்துக்கொள்ளலாம். ===================== ===================== ==================== பின்குறிப்பு: முதலில் பதிந்திருந்த திரி என்ற வார்த்தைகள் அனைத்தும் நீக்கி/மாற்றி பின்னர் பதிக்கப்பட்டுள்ளது. |
Quote:
Quote:
நிர்வாக மேற்பார்வையாளர் அசோவின் மேற்கூறிய கருத்துக்களையும் விளக்கங்களையும் வரவேற்கிரேன். |
இது நல்ல ஓர் தீர்வு தான் அசோ அண்ணா. வரவேற்க்கப்படவேண்டிய ஒன்று.
ஆனால், இது கதை போன்ற ஒற்றைத் திரிகளுக்கு ஓகே. தொடர் திரிகள் உதாரணத்திற்கு, மரியாவின் காமசிரிப்புகள் திரி, வெங்கட்டின் காமக்கிறுக்கல் திரி, மச்சான், நாணா போன்றவர்களின் அசை பட திரிகள், எனது ஆடியோ திரிகள் இவை எல்லாம் எப்படி எடிட் பண்ணுவது ? அப்புறம் படைப்பாளர் திரியை அவ்வபொழுது எடிட் செய்ய வேண்டும். அதற்கு என்ன பண்ணுவது ? இதற்கெல்லாம் ஒவ்வொரு முறையும் நிர்வாகிகளையா தொடர்பு கொண்டிருக்க முடியும் ? கதை, கவிதை போன்ற திரிகளுக்கென்றால் ஓகே !! |
மாற்றம் ஒன்றே மாறாது .. புதிய மாற்றம் வரவேற்க தக்கதே .. # எழுத்து பிழை இருப்பின் 10 நாள் அவகாசம் போதும் என்றே தோன்றுகிறது திருத்த ..
|
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
தேவையான மாற்றம் தான் அஷோ அண்ணா. ஆனால் இதில் சில சந்தேகங்கள் மற்றும் சிக்கல்கள் இருப்பதைப் போல தெரிகிறது அண்ணா.
நண்பர் மதன் அவர்கள் சொன்னதோடு சேர்த்து தொடர்கதைத் திரிகளில் சுட்டிகள் சேர்ப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்க ஏதும் வழி இருக்கிறதா அஷோ அண்ணா? உதாரணமாக கதையின் பத்தாம் பாகம் பதித்து விட்டு அதன் சுட்டியை ஒன்பது பாகங்களில் அதாவது ஒன்பது திரிகளில் திருத்த வேண்டி வருமே அண்ணா. அதனை படைப்பாளி செய்யாமல் நிர்வாக நண்பர்கள் தான் செய்ய வேண்டும் என்றால் அது நிர்வாகத்தாருக்கு சிரமம் தானே அண்ணா? படிப்பவர்கள் சுட்டி இல்லாமல் ஃபாரத்தின் உள்ளே தேடிப் போய்ப் படிப்பது மிகவும் அரிது என்பதால் கேட்டேன் அஷோ அண்ணா. செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது... |
Quote:
Quote:
Quote:
யாரொருவரும் தன் படைப்புகளை பின்னர் (10 நாட்கள் கழித்து) திருத்த விரும்பினால் அதனை திருத்தி நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் போதும். அப்போதைக்கு ஆன் -லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் உடனே திருத்தம் செய்ய இயலும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நி.உறுப்பினர் ஆன் லைனில் வந்தவுடன் இந்த திருத்தங்களை செய்ய அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். |
Quote:
Quote:
Quote:
படைப்பாளர் திரி வேறு அப்டேட் செய்யனும். இதெல்லாம் கதைக்கு ஆகாது. கதை பகுதிகள், சித்திர கதைப்பகுதிகள் மற்றும் கவிதை / உல்டா இவைகள் நீங்களாக மற்ற திரிகள் எப்பொழுதும் போல 'எடிட்' ஆப்ஷனுடன் இருத்தல் நல்லது !! |
Quote:
இன்னொரு முக்கியமான விஷயம், பலருக்கு காம லோகத்தில் நுழைய சரியான நேரமே கிடைப்பதில்லை. எப்போதாவது கிடைக்கும் சின்ன நேரத்தில், அவர்களின் படைப்புகளை பதித்து செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது இந்த கட்டுபாடுகள் அவர்களுக்கு கண்டிப்பாக சிரமமாக இருக்கலாம். ஒவ்வொரு புதிய படைப்பின் போதும் அறிமுக திரியில் அப்டேட் செய்பவர்களுக்கும் சிரமம் தான். அதற்காகவும் ஒவ்வொரு முறையும் நிர்வாகிகளுக்கு தனி மடல் அனுப்ப வேண்டி வருகிறது. இது நல்லதொரு கட்டுப்பாடு என்றாலும், நேரத்தை வீணடிக்கிறது. மேலும் கொஞ்சம் சிரமத்தையும் கொடுக்கிறது. நிர்வாகிகள் இதில் சில மாற்றங்கள் செய்வதின் மூலம் இதை சரி பண்ணலாம் என்று நினைக்கிறேன். அடிக்கடி அப்டேட் செய்யப்படும் திரிகளுக்கு எப்போதும் போல எடிட் ஆப்சன் தேவை படுவதாக நான் கருதுகிறேன். இதில் மாற்றங்கள் கண்டிப்பாக தேவை. யாருக்கும் சிரமம் இல்லாத வகையில் இதில் நிர்வாகிகள் மாற்றங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன். |
நான் மதன் மற்றும் தமிழ்லவ்வர் கருத்தோடு ஒத்துபோகின்றேன். இந்த நடைமுறை கதைக்கு ஒத்துவரலாம்.
தங்கவாசலில் உள்ள காமபடதிரி மற்றும் காம அசைபடதிரிக்கு தேவையற்றது என்று நினைக்கிறேன். |
All times are GMT +5.5. The time now is 09:12 PM. |
Powered by Kamalogam members