காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   லோக கவியரசர் நல்லவன்1010க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=64597)

anabayan 01-03-14 10:47 AM

லோக கவியரசர் நல்லவன்1010க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 
உலக நல் வாழ்க்கைக்கு தேவையான நீதியை ஈரடிகளில் சொன்ன நம் வள்ளுவனை போல நம் லோக மக்களின் பதிப்புக்கு நாலடிகளில் கருத்து சொல்லும் நம் நண்பர் நல்லவன் பிறந்த இனிய நாளான இன்றய தினத்தில் அவரை, ஆண்டவனருள் பெற்று என்றென்றும் நலமோடும் வளமோடும் நீடூழி வாழ வாழ்த்துவதில் பெருமையும் பேருவகையும் அடைகிரேன்.

நம் லோக கவியரசர் நண்பர் நல்லவன்1010 அவர்களை வாழ்த்த நீங்களும் வாருங்கள் நண்பர்களே

kamakodangi68 01-03-14 11:25 AM

அன்பு நண்பர் நல்லவன்1010 அவர்களை அவர்களின் இனிய பிறந்ததினத்தில் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இனிய நண்பர் இதேபோல் பல பிறந்ததினங்களை அவர்தம் வாழ்வில் கண்டு எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்..

dreamer 01-03-14 12:58 PM

வாழ்த்துகள், ஸ்லேடைக் கவிஞரே. 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' வளமொடு வாழ்ந்து லோகத்துக்குச் சுவை சேர்க்க என் ஆசிகள்.

tdrajesh 01-03-14 01:53 PM

இனிய நண்பர், நம் லோக கவியரசர் நல்லவன்1010, அவர்களின் இனிய பிறந்தநாளான இன்று அவரை, எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ்கவென்று வாழ்த்துகிறேன்.

கண்ணன்76 01-03-14 01:58 PM

அன்பு அண்ணன் நல்லவர்1010 வல்லவர் தமிழ் புலமையாருக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

snehan 01-03-14 02:57 PM

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பர் நல்லவன்..

maria 01-03-14 04:38 PM

அன்பு நண்பர் நல்லவர் கவிசக்கரவர்த்தி பல்லாண்டு பல்லாண்டு வளமோடு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்

nandabalan 01-03-14 06:20 PM

இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

ஸ்திரிலோலன் 01-03-14 06:56 PM

அடடா... நம்ம நல்லவன் அண்ணனுக்கு பிறந்த நாளா? அண்ணா சொல்லவே இல்லையே... லோகக் கவியரசர், தமிழ்ப் புலவர், ஸ்லேடைக் கவிஞர், நல்லவர், எங்கள் அண்ணன் நல்லவன்1010 அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

Mathan 01-03-14 07:26 PM

Quote:

Originally Posted by maria (Post 1280065)
அன்பு நண்பர் நல்லவர் கவிசக்கரவர்த்தி பல்லாண்டு பல்லாண்டு வளமோடு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்

லோகத்தின் கவிச்சக்ரவர்த்தி, கவியரசர் என அனைத்து புகழுக்கும் சொந்தமானவர் அண்ணன் நல்லவன் அவர்கள்.

நான் முன்பு சிறுவனாக இருந்த சமயம் எங்கள் கிராமத்திற்கு செல்லும்பொழுதெல்லாம் அங்கே உள்ள பெரியோர்கள் இதுப்போன்று நிறைய இலக்கிய சமாச்சாரங்களைப் பற்றி எல்லாம் பேசிக்கொள்வார்கள். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். எனக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், கேட்பதற்கு ஏனோ ஓர் வித இன்பமாக இருக்கும். உடம்பில் வீரம் பிறந்த மாதிரி உணர்ச்சிகள் ஏறும்.

அன்பு அண்ணன் நல்லவன் அவர்கள் லோகத்திற்கு ஆற்றி வரும் இலக்கிய படைப்புகளிலிருந்தும் / பதிவுகளிலிருந்தும் என்னால் அந்த உணர்வை மீண்டும் பெறும் படி உள்ளது.

பின்னூட்டங்களிலேயே இலக்கிய நயத்துடன் கவிதையை தட்டிவிடும் அண்ணன் நல்லவன் அவர்கள் எப்பொழுதும் நம்முடன் இங்கே இனைந்திருந்து அவரது கவி இலக்கியத்தை நம்மோடு பகிர்ந்து நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தவேண்டுமாய் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று முன்தினமே அவருடன் நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்ததும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது !

அண்ணன் அவரது புலமைக்கும் தமிழறிவிற்கும் நான் தலை வணங்குகிறேன்.

லோகத்தின் ஓர் பொக்கிஷமான நல்லவன் அண்ணன், ஆண்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அண்ணன் அவர்களுக்கு இந்த திருமூலர் மந்திரத்தைப் போல் அன்பும் சிவமும் இரண்டரக் கலந்து, அவரது இந்த பிறந்த தின நன்னாளில் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ என அவரை வாழ்த்தி என்னையும் ஆசிர்வதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் !

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

அண்ணன் நல்லவன் அவர்கள் அன்பும் சிவமுமாய் வாழ்ந்திடுவாறே !!


திரியை ஆரம்பித்த அநபாயன் அண்ணுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !


All times are GMT +5.5. The time now is 12:29 PM.

Powered by Kamalogam members