புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது.
நுழைவுத் தேர்வு கேள்விகளுக்கு பலர் தவறுதலாக பதிலளித்தாலும், அவர்களுடைய முயற்ச்சியைப் பாராட்டி அவர்களின் கணக்குகள் அனைத்தும் முடுக்கிவிடப் பட்டன.
ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் கணக்குகள் துவங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அவ்வாறு ஏன் செய்தார்கள் என விளக்கம் கேட்டு தனிமடல்/இமெயில் அனுப்பப் படும். மேலும் அவர்களாக முன்வந்து விளக்கம் கொடுத்து தேவையில்லா கணக்கை மூட உதவினால் நல்லது, அவர்கள் இங்கே தொடரலாம். அல்லது அவர்களது அனைத்து கணக்குகளும் மூடப் படும்.
புதிதாக சேர்ந்தவர்கள் சிலர் விதிமுறைகளை மதிக்காமல், நமது திறமையை சோதிக்க நினைத்திருக்கலாம், அதனால் 2-3 கணக்குகளை துவங்கிவிட்டு இன்னும் பதிக்காமல் பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது காமலோகத்தைப் பற்றி அவர்களுக்கு இன்னமும் தெரியாததே காரணம். இங்கே விதிமுறைகளை மதித்து உண்மையாக நடந்து கொண்டால் உங்கள் காமலோக பயணம் சிறப்பாக அமையும், அல்லது எச்சரிக்கைகள், தடைகள் என்று உங்கள் பயணம் விபத்துக்குள்ளாகும். அதனால், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை உருவாக்கியவர்கள், தேவையில்லா கணக்குகளை மூடச் சொல்லி நிர்வாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவும், அல்லது அவர்களுக்கு சொந்தமான அனைத்து கணக்குகளும் விரைவில் மூடப் படும்.
தளத்தில் நீங்கள் இன்பமுற, மற்றவர்களும் இன்பமுற, விதிமுறைகள் கடைபிடிப்போம், அதன்படி நடப்போம்.
|