நிர்வாக சவாலில் முதல் முறையாக முதலிடத்தை பற்றிக்கொண்ட காவேரிக்கும் மற்றய போட்டியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .....
கடந்த இரண்டு நிர்வாக சவால் போட்டிகளிலும் மிகக்குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது போட்டியாளர்களின் ஆர்வத்திற்கு ஒரு தடைக்கல்லாக அமைய வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன
ஒரு எழுத்தாளனின் ஆர்வத்தை தூண்டுவதும் அடுத்தடுத்த படைப்புக்களை கொடுப்பதற்கு உந்துதலாக அமைவதும் வெற்றியோ தோல்வியோ அல்ல அவர்கள் படைப்புக்கு கிடைக்கும் கருத்துக்களும் அதை படித்தவர்களின் எண்ணிக்கையுமே அடுத்த படைப்புக்களை கொடுக்க தூண்டும் உந்துகோலாக அமைகின்றது. ஆனால் கடந்த இரண்டு சவால்களிலுமே இவ்விரண்டையும் அரிதாகவே காணக்கூடியதாக உள்ளது பெரும் வருத்தத்தை அளிக்கின்றது
நண்பர்களே நீங்கள் சவால்களில் பங்குகொள்கிறீர்களோ இல்லையோ தயவு செய்து படைப்புக்களை வாசித்து அதற்க்கு கருத்துக்கள் தெரிவிப்பதையும் வாக்களிப்பதையும் தவறாமல் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்கள் கருத்துக்களும் உங்கள் வாக்குப்பதிவு வளர்ந்துவரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் என்பதை மறக்கவேண்டாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் .
பதுங்கி நிற்பவனை விட பங்களிப்புச்செய்பவனே சிறந்த எழுத்தாளன் ஆகின்றான்
ஒதுக்கி வைப்பவனை விட ஒத்துழைப்பு கொடுப்பவனே சிறந்த வாசகன் ஆகின்றான்
நன்றி.
|