Quote:
Originally Posted by RasaRasan
மஞ்சுக்கா ஈத் பண்டிகை என்றால் புரிகிறது. ஆனால் ஈத் உல்ஃபித்தர் என்றால் என்ன?
|
ஃபித்ர் என்றால் ஈகை.. அதாவது.. நோன்பு நோற்றவர்கள் -நோற்காதவர்கள் - பெரியவர்கள் - சிறியவர்கள் அணைவருக்கும் இந்த தினத்தில் தாங்கள் உண்ணும் தானியத்தில் 2.6 கிலோ ஏழைகளுக்காக வழங்க வேண்டும். இது கட்டாயம்.
உதாரணமாக ஒரு குடும்பத்தில் குழந்தையையும் சேர்த்து 5 பேர்கள் என்றால் ஏறக்குறைய 13 கிலோ தாங்கள் உண்ணும் தரத்திற்கு குறைவில்லாத அரிசியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். (கோதுமை பேரித்தம் பழம் போன்றனவும் உணவு பழக்கதத்தைப் பொறுத்து)
இதனால் இரண்டு நன்மைகள்.. ஒன்று நோன்பிருந்து .. அந்த நோன்பின் போது நடந்திட்ட தவறுக்கு இது பரிகாரமாம்... இரண்டு: பெருநாளை ஏழைகளும் சந்தோசமாக கொண்டாட வாய்ப்பு ஏற்படுத்துதல்
இவ்வளவு தான் எனக்குத் தெரிந்தது