வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது
பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த சவாலின் முடிவுகள் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது.
பல பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவரவர் கற்பனை திறத்தினை காட்டினார்கள். எழுதிய பலருக்கும் அடடே இப்படியும் இந்த கதைக்கு ஒரு கோணம் உள்ளதா என்றூ சிலிர்க்கும்படி இருந்தது அனைவரின் கதைகளூம், அதுமட்டுமா ஒவ்வொருவரின் எழுத்துநடையும், உவமைகளூம், கதைகருவுக்கு வலுசேர்க்க முயன்ற முயல்வுகளூம் சிறப்பாக இருந்தன. எழுத்தாளர்களின் பட்டறிவும், படிப்பறிவும் அவர்கள் எழுத்தில் துள்ளாட்டம் போட்டு வந்தன. போட்டி எழுத்து என்பதால் கவனம் கண்ணும் கருத்துமாக இருந்தது(ரெகுலர் கதைக்கு வானமே எல்லை)
தனக்கு பிடித்த உணவை சமைப்பதை விட பிறருக்கு பரிமாறபடும் உணவுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் எனபதற்க்கு இந்த போட்டி கதைகள் சிறந்த உதாரணம்.
நிர்வாகத்திற்க்கு கேட்டு கொள்வதெல்லாம், தொடர்ந்து இது போன்ற போட்டிகதைகள் நடத்துங்கள். ஏனோ தானோ கதைகளாக அல்லாமல் சிறந்த கதைகள் தளத்திற்க்கு கிடைக்கும்.
கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது.
__________________
அன்புடன் சுப்பு 2000
|