அன்பர் ராஜேஷ் அவர்கள் தளம் வந்து எல்லோர் மனம் கவர்ந்த காலத்தில் அடியேன் விடுப்பில் (தளத்தில் பங்கேற்க இயலாத சூழ்நிலையில்) இருந்ததால் அவரின் படைப்புகளை அவ்வப்போது பார்த்து, மகிழ்ந்து, பாராட்ட இயலாது இருந்தது. விடுப்பு முடிந்து தளத்திற்கு வந்த உடன் 'அட' என மனதில் நின்றவர்களில், மனம் கவர்ந்தவர்களில் ட்ரீமர் சாரும், நண்பர் ராஜேசும் முக்கியமானவர்கள்...
இவர் 100 கதைப் பதிவுகள் தந்தவர் என்பதே எமக்கு புதிய செய்தி தான். ஆனாலும் வாசித்த இவரின் சில கதைகளிலேயே இவரின் திறனை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். நகைச்சுவை, சென்டிமெண்ட், மசாலா என பல கோணங்களையும் சிறப்பாக கடந்து செல்லும் இவர் திறமை தளத்திற்கு வரம், பெருமை!
தொடர் சவால் நாயகராக, சவால் மகாராஜாவாக பரிணமித்தவர்கள் இவரைப் போல எவரும் இலர்!
எல்லாக் கதைகளிலும் இவரின் பின்னூட்டம்... பெரும்பாலும் ரசித்த, சிறப்பான வரிகளின் மேற்கோளுடன்... இவர் படைப்பாளிகளின் உற்சாக பானம்!
'உடுக்கை இழந்தவன் கை போல' என நண்பர் அசோவே அதிசயித்த அதிசய மனிதர்... தவறுகளையும், தனிப்பட்ட கருத்துக்களையும் தனிமடலில் தெரிவித்துவிட்டு, பாராட்டுக்களை சபையில் சொல்லும் பண்பாளர்...
கதைத் தலைப்புகளில் 'கரு'வைச் சொல்லும் வித்தியாசமான படைப்பாளி... சமீபத்தில் 'அம்புலி முத்துக்கள்' என்னும் சரித்திர கற்பனை கதை எழுதி லலிதாதாசன், புழு, சுப்பு, ருத்ரன் என பலரை நினைவூட்டி நம்மை பிரமிக்கச் செய்த சரித்திரம் படைத்தவர்...
இன்னும் நிறைய சொல்லலாம்... அவர் இன்னும் இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்....
|