சினிமா வாழ்க்கையில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஒரு சிறந்த பண்பட்ட மனிதனாக வாழ்ந்து மறைந்த இந்த மாமேதையை எப்படி மறக்க முடியும்.
இத்தனை ஆண்டு காலம் விரதம் இருந்து சபரி மலை பயணம் கொண்ட இது போன்ற மனிதரை காண்பது மிகவும் அரிது.
படத்தில் கதா நாயகனாக இருந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் கடைந்து எடுத்த அயோக்கியனாக உலா வரும் சில பேர் இவரை பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா......?
இன்னும் எங்கள் ஊரில் சில பெருசுகள் ஏன் நம்பியாரைப்போல் கெடுக்கிறாய் என சொல்வார்கள் அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த மாமனிதரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
|