Quote:
Originally Posted by பிரசாந்த்
மீண்டும் இதே போல் சவால் போட்டி நடத்தினால் ஒரு கதைக்கு மட்டும் வாக்களிக்கும் முறையில் வைக்காமல் பிடித்த கதைகளுக்கெல்லாம் வாக்களிக்கும்படி வைத்தால் நன்றாக இருக்கும்.
.
|
இது சம்பந்தமான விவாதம் நிர்வாக குழுவில் உள்ளது.
Quote:
Originally Posted by பிரசாந்த்
நண்பர் அசோ குறிப்பிட்டு இருப்பது ஒரு வருத்தமான விஷயம்... இந்தப் போட்டியையும் கட்டாயமாக ஆக்கி விட்டு, தண்டனையாக ஏதாவது ஒரு முடிவுறாக் கதையை குறைந்தது ஒரு பாகமாவாது கொடுத்து முடிக்க வேண்டும் என செய்துவிடலாம்.
|
Quote:
Originally Posted by naughty2hotty
Quote:
Originally Posted by பிரசாந்த்
இந்தப் போட்டியையும் கட்டாயமாக ஆக்கி விட்டு, தண்டனையாக ஏதாவது ஒரு முடிவுறாக் கதையை குறைந்தது ஒரு பாகமாவாது கொடுத்து முடிக்க வேண்டும் என செய்துவிடலாம்.
|
இது கூட நல்ல யோசனை தான். தண்டனையாக ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கதையை பதிக்கவிட்டால் தலைவாசலுக்கு அனுப்பி விடலாம்.
|
கதை எழுத தெரிந்தவர் என்றால் அதன் அருமை தெரிந்து கதையை சிறப்பிக்க வாக்களித்து இருந்திருப்பார். ஒரு கிளிக் செய்து வாக்களிக்க இயலாதவர் எப்படி பின்னர் கட்டாயத்தின் பேரில் கதை எழுதுவார்?
சிறு வயதில் நான் கேட்டு ரெம்ப நாள் அர்த்தம் புரியாத பழமொழி. கீழே உள்ளது.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி எப்படி வைகுண்டம் செல்வான்.
இப்போதைக்கு நிர்வாக உறுப்பினர் என்ற வகையில் வெறும் வருத்தமே. ஆனால் உறுப்பினர் வாக்கு போடவில்லை என்று மாதந்திர கதை போட்டியில் நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களுக்கு பரிந்து பேசும் உறுப்பினர்கள், அப்படி கடுமை காட்டவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தளம் ஆரம்பித்து கடந்த 2 வருடமாக தான் இந்த. கெடுபிடி, அதற்கு முன் பல வருடங்கள் ஒவ்வொரு வாக்கெடுப்பு திரியில் சொல்லி சொல்லி வெறுத்து தான் இந்த முடிவு.