கிட்டத்தட்ட 400 படைப்புகளுக்கு மேல் செய்த மெளனி காலமாகிவிட்டார் என்றறியும் போது, காமக்கதை வாசகர்களுக்கும் படைப்பாளிக்களுக்கும் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு சோகத்தில் ஆழ்த்திருக்கும். இந்த காமலோகம் தளம் இருக்கும்வரை மெளனி என்றும் நிலைத்திருப்பார். புகழ் ஓங்கியிருக்கும்.
தமிழில், அரிதாக வரும் மூன்றாம் பாலினத்தவர் வகை காமக்கதைகளை அருமையாக எழுதியதற்கு வாழ்த்தியதுதான் அவரிடம் என் முதல் தொடர்பு. அடிக்கடி தனிமடலில் தொடர்பு கொள்வார்.
அவர் ஓரு ஆங்கில கதையை மொழிப்பெயர்த்து தழுவி எழுதும் போது, அந்த கதையின் ஆசரியர் நுண்ணர்வுடன் தமிழர்களை வில்லனாக இழிந்தவர்களாக சித்திரிக்கும் போக்கை கொண்டவர், அதனால் அந்த கதையை தொடர வேண்டாமென்றேன். அதைவிட தமிழில் அருமையான கதைகள் இருக்கின்றது என்றேன். எல்லோரும் பாராட்டும் கதைத்தானே, நல்ல ஸ்லட்டீஷ் கதநாயகி கதைதானே என்றார். என்னவாக இருந்தாலும் எனக்கு பிடிக்கவில்லை என்றேன். அப்படியென்றால் ஒரு ஆய்வு கட்டுரையைப் போல எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார். சரி கொஞ்சம் டீடெய்லாக எழுதலாம் என்று காமக்கதைகளை பற்றி எழுதி, அது முடிக்க முடியாமல் பாதியில் நிற்கின்றது. அதற்குள் தளத்தின் நிர்வாகிகளுக்கு அந்த திரி பிடிக்காமல் போய்விட்டது.
ஒரு ஸ்லட்டிஷ் கேரக்டரான ஹீரோயின் கதைதானே நன்றாகத்தானே இருக்கின்றது என்று அவர் சொன்ன போது. அதை விட தமிழில் அருமையாக நன்றாக கதைகள் வந்திருக்கின்றது, என்று வேறு ஒரு தளத்தில் நான் படித்த கதையை சுட்டிக் காட்டினேன். அதற்கு பதிலாக, சீக்கிரம் தங்கவாசலை அடையுங்கள் என்றார்.
தங்க வாசலை அடைந்தவுடன் தெரிந்தது அந்த கதையை எழுதியது நண்பர் மெளனிதானென்று.
அதைப் பற்றி அவருக்கு தனிமடலில் கடிதம் எழுதினேன். ஆனால், பதிலளிக்க அவரில்லாமல் போய்விட்டார். இனிமேல் பதில் வராது.
மெளனிக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக, அவரின் ஓவ்வொரு படைப்பை படித்து என் கருத்தை கூறுவதாக இருக்கும் என நினைக்கிறேன்.
மெளனிக்கு என் நன்றிகள்.
அவருடைய ஆன்மா இறைவனின் கால்களில் சாந்தியடையட்டும்.
|