View Single Post
  #1  
Old 26-10-11, 10:16 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Thumbs up செண்டிமெண்ட் நாயகன் tdrajesh 6000 பதிவிற்கான வாழ்த்து மடல் (updated: 03.08.21)

நண்பர் tdrajesh நாளை தனது 1000 -ஆவது பதிவை தொட இருக்கிறார். அவரை வாழ்த்த தீப ஒளி நாளாம் தீபாவளி திரு நாளில் திரி தொடங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.

ராஜேஷ் அவர்கள் தளம் சேர்ந்து 14 மாதங்கள் ஆகின்றது. இந்த 14 மாதங்களுக்குள் கிட்டதட்ட 100 கதைகள் தந்துள்ளார் (100 என்றால் அவரின் அனைத்து தொடர்ச்சி பாகங்கங்கள் உள்பட). 5 தடவை சவால் ராஜா விருது பெற்ற ராஜேஷ் சவால் கதைகளின் நாயகனாகவே விளங்குகிறார். 2010-ஆம் வருடத்தில் நவம்பர் மாதத்தில் சவால் ராஜாவாக முதலில் வெற்றி பெற்றவர் 2011-ஆம் வருடத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் மாத சவால் கதைகளில் வென்று வாகை சூடி சவால் கதைகளுக்கு பெருமை சேர்த்தவர். சவால் கதைகளில் மற்ற நண்பர்கள் அதிகம் பங்களிக்க முன் வராத போது, ராஜேஷ் சவால் கதைகள் எல்லாவற்றிலும் பங்கேற்று சவால் சவால் கதை பகுதியை பர பரப்பான பகுதியாக்குகிறார் என சொன்னால் அது மிகையாகாது.

சவால் கதைகளில் மட்டுமல்லாது சிறந்த மாத கதைகளிலும் 2010 டிசம்பர் மற்றும் 2011 ஜனவரி மாத சிறந்த காம கதைகளில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். நண்பர் ராஜேஷ் அவர்களின் கதைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இவரின் கதை தலைப்புகளே பலவித கதைகளை சொல்லும். சுடர் விழியின் அம்புலி முத்துக்கள், சுகம் ஆஸ்பத்திரியில் பெற்ற சுகம், தாய்மையை மறவாத பெண்மை அங்கேயும் உண்டு, குறையோ நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன், சொல்லாயோ வாய் திறந்து வார்த்தை ஒன்று என எல்லா கதைகளின் தலைப்புகளையும் சொல்லி கொண்டே போகலாம்.

கதைகளின் தலைப்பை போலவே ராஜேஷின் கதைகளும் குடும்பம் நண்பர்கள் என பின்னி பிணைந்து இருக்கும். செண்டிமெண்ட் கதைகளை லோகத்தில் தருபவர்களில் டாப்பில் இருப்பவர் ராஜேஷ்தான் என நான் அடித்து சொல்வேன். எனவேதான் நான் அவருக்கு செண்டிமெண்ட் நாயகன் என பட்ட பெயர் வைத்துள்ளேன். பல குடும்ப கதை பாத்திரங்களை ராஜேஷின் கதை பாத்திரங்களில் கண்டு நெகிழ்ந்து போயுள்ளேன்.

ஒரு கதையை வெறும் காமத்துடன் படித்தால் அலுத்து சலித்து போகும். காமம், கதை, செண்டிமெண்ட், மசாலா என கதைக்கு தேவையான அனைத்தையும் சுவையாக கொண்டு அரு சுவை கதைகளை தருவதில் வல்லவர். இவரின் கதைகளில் வரும் பாத்திரங்கள் நன்றி உடையவர்களாகவும், ஒருவர் இன்னொருவருக்கு அனுசரணையாக உதவுவது போல் உள்ள கதைகளாகவே அதிகம் இருக்கும். சமீபத்தில் அசோ அவர்கள் நடத்திய வாசகர் சவால் 52-ல் சுடர் விழியின் அம்புலி முத்துக்கள் என்றொரு கதையை முதல் ஆளாய் தந்திருந்தார். அவரின் மற்ற கதைகளிலிருந்து முற்றிலுமாய் மாறுபட்ட சரித்திர கதையாய் என் மனதில் பிடித்த கதையாய் உணர்கிறேன்.

லோகத்தில் வெறும் கதைகளை எழுதி போட்டு விட்டு, கதை எழுதறதுதான் என் வேலை, படிச்சி பின்னூட்டம் போடுறதுதான் உங்க வேலை என நினைக்காமல் மற்ற நண்பர்கள் படைக்கும் அனைத்து கதைகளுக்கும் தனது பின்னூட்டத்தையும் தந்ததால்தான் இதோ இன்று 14 மாதங்களில் தனது 1000 -ஆவது பதிவை தொட போகிறார். கதை மட்டுமல்லாது பின்னூட்டங்கள் மூலமும் ராஜேஷ் தனது சிறப்பான பயணத்தை லோகத்தில் தொடர்வதால்தான் இந்த திரியை ராஜேஷ் அவர்களுக்காக தொடங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இன்னும் ராஜேஷ் அவர்களை பற்றி பல சிறப்புக்களை சொல்லாம். அதில் முக்கியமானது புதியவர்களை ஊக்குவிப்பது. அதனை ராஜேஷ் திறம்பட செய்து வருகின்றார். மேலும் தொடர்ந்து லோகத்தில் தனது படைப்புக்களையும் பதிவுகளையும் தொடரவும், அவரது தனிப்பட்ட வாழ்விலும் எல்லா நலன்களை பெறவும் வாழ்த்துகிறேன்.




Last edited by RasaRasan; 27-10-11 at 08:45 AM.
Reply With Quote