View Single Post
  #456  
Old 01-08-16, 10:57 AM
kadalan01 kadalan01 is offline
User inactive for long time
 
Join Date: 14 Sep 2011
Location: Colombo, Sri Lanka
Posts: 100
My Threads  
தலைமை நிர்வாகி அவர்களே,

நான் எழுதிய நான்கு திரிகள் பூட்டப்பட்டுள்ளன.

முதலாவது நான் எழுதிய 'பஸ் பயணங்களில்..... என் அனுபவம்....' என்ற கதை ஆகும். இதில் எனது தவறும் இருக்கிறது. இதனை நான் வேறு ஒரு தளத்திலும் பதித்தேன். இது எனது தவறாகும். ஆனாலும் நான் 25 வது விதியை நினைத்து பிறர் எழுதிய கதையை நான் பதிக்கவில்லை என்கிற நினைவில் செய்தேன் ஆனாலும் தவறு என்னுடையது ஏற்று கொள்ளுகிறேன்.

பின்பு நான் எழுதிய மூன்று ஜோக்குகளின் திரிகளும் பூட்டபட்டுள்ளன. 'வேர்க்கடலை ஞாபகம்' 'ஏன் ஓடினாய்' தக்காளி பழுத்ததா' என்கிற திரிகளே அவை. இவை மூன்றுமே நான் எழுதியவை ஆகும். திரியை பூட்டியவர் இவை போன்றவை இதற்கு முன் இவை காமலோகத்தில் வந்துள்ளன என கூறியுள்ளார்.

நிர்வாகி அவர்களே, நான் தற்போது தான் தலைவாசலில் உள்ள ஒருவன். நான் இது போன்ற எதையும் இதற்கு முன்னர் காமலோகத்தில் பதிக்கவில்லை. அத்துடன். நான் இவற்றை ஆங்கில ஜோக்குகளிலிருந்து எடுத்து தமிழ் படுத்தியவையும் இருக்கின்றன. ஆனாலும் அனைத்தயும் நானே எழுதினேன். எவையையும் நான் காப்பிய பேஸ்ட் செய்யவில்லை.

தயவு செய்து இந்த மூன்று ஜோக் திரிகளை திறந்து தரும்படி தயவாய் கேட்கிறேன். நன்றி.
Reply With Quote