திரியோ பின்னூட்டமோ பதிக்கும் போது பத்திகள் மூன்று அல்லது நான்கு வரி இடைவெளியில் பிரிந்து நிற்கின்றன. ஒவ்வொரு முறையும் பதித்து பிறகு எடிட் செய்ய வேண்டியது இருக்கிறது.
வேர்ட்டில் இருந்து காப்பி செய்து இங்கு பதித்தாலும் அதே பிரச்சனை. கதை பதிக்கும் போது இது அதிக உழைப்பாகி விடுகிறது. பல மாதங்களாகவே இந்தப் பிரச்சனை. நான் ஃபையர்பாக்ஸ் உலாவி பயன்படுத்துகிறேன். இது எனக்கு மட்டுமான பிரச்சனையா என்று தெரியவில்லை. எதேனும் எளிதான தீர்வு இருக்கிறதா?
எடிட்டிற்குப் பிறகு பதிந்தது: இந்தத் திரியைப் பதித்த போது மேலே இருக்கும் இரண்டு பத்திகளும் ஒட்டி கொண்டு இருந்தன. நான் எடிட்டில் ஒரு வரி இடைவெளி விட்டேன். ஆனால் அகலமாக பிரிந்து கொண்டது.
|