Quote:
Originally Posted by puzhu
சிறுத்தை என்றாலே புள்ளி போட்டது என்றாலும் நீங்க ஒரு பெரும்புள்ளீ என்பது உங்கள் படைப்புகளினாலேயே விளங்கும்.
|
நண்பர், இளைஞர், இனியவர், மேலும் நல்ல படைப்பாளியான சிறுத்தையாரை பற்றி மிக அழகாக சொன்னார் இன்னொரு நண்பர் புழுவார். நான் பல லோக நண்பர்களை நேரில் சந்திருந்தாலும் நண்பர் சிறுத்தையார் பெங்களூரில் பின்பக்கம் இருந்து என் தோளைத்தொட்டு “ஹலோ” என்று சொன்னப்போது அசந்துதான் போனேன். சற்றே மாநிறத்தில் நடிகர் அரவிந்த்சாமியை பார்த்தது போல இருந்தது. இந்த இளைஞரா சிறுத்தை என்று ஆச்சரியப்பட்டேன்.
அந்த இளம் வாலிபருக்கு நாளை விடியற்காலை சேலம் பக்கத்தில் இருக்கும் அவரின் சொந்த ஊர் கோயிலில் திருமணம்.
காதலும் கவிதையுமான சங்கமம்
நேசித்த மனங்கள் வாழ்வின் துவக்கம்
இனிய விடியலில் திருமண விழாக் கோலம்
இனி நாளும் வாழ்வே விழாக் காணும்!!!
புரிதலும் அறிதலும் ஒன்றாகி
அன்பும் காதலும் தினம் பெருகி
ஒருமித்த எண்ணத்தில் நறுமண வாழ்வாகி
உருவாகிடும் கவிதையே மழலையாகி!!!
சீரும் சிறப்பும் வளமுமாகி
நாளும் நலனில் உடலுமாகி
தேனில் நனைந்த பலாவாகி
வாழ்க்கை தெவிட்டா சுவையுமாகி!!!
இவர்போல் வாழ்ந்தோர் எவருமிலாதவருமாகி
உறவும் ஊரும் போற்ற நற்பெயருமாகி
அனைவர்க்கும் உதாரண தம்பதியராகி!!!
வாழ்க்கையில் இன்பம் ஊற்றாகி
ஆலம் விழுதாய் குலம் தழைத்தே
வளம் நலம் வாழ்வினில் வசமுமாகி
வாழ்வாங்கு ஆயுளும் வாழ்ந்திடுவீர்!!!
வாருங்கள் நண்பர்களே, இந்த இனிய இளம் தம்பதிகளை வாழ்த்துவோம்!
கவிதைக்கு நன்றி : இணையத்தளம்.