கவியரசு கண்ணதாசன் அவர்களை பற்றி மரியாதைக்குரிய மூத்த உறுப்பினர் ஜெகன் அண்ணா ஆரம்பித்துள்ள இந்த திரியில் முதல் பின்னூட்டமிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கண்ணதாசன் அவர்கள் பாடாத பொருட்கள் மிகவும் குறைவு.ஆனால் அவருக்கு சரிவர பொருள் - அதாவது பணம் சேர்க்க தெரியவில்லை. பத்திரிக்கைகள் நடத்தியும் , திரைப்படங்கள் எடுத்தும் நஷ்டப்பட்டு, அந்த கடன்களுக்கு வட்டி கட்டவே அவர் பாட்டு எழுதி வந்த பணம் எல்லாம் போயிற்று,
பின் ஓரளவு சுதாரித்து குடும்பத்துக்கு நல்ல பணம் சேர்த்து விட்டு மரணமடைந்தார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அந்த நல்ல ஆத்மா சாந்தி அடையட்டும்.
|