Quote:
Originally Posted by rajesh2008
இதில் என்னால் சிவப்பு வண்ணமிடப்பட்ட இந்த எழுத்துக்கள் இடம் பெறாமலிருப்பது பிழை எனதோன்றுகிறது. வல்லுநர்கள் தெரிவிக்கலாம்.
|
என்பதிவில் குற்றமா?
சரி, சமாளித்து பார்ப்போம்.
மேலே கண்ட வார்த்தையில் சமாளித்துப்பார்போம் என்று எழுதினால் தான் ப் தேவைப்படுமே அன்றி சமாளித்து பார்ப்போம் என்று எழுதினால் ப் தேவையிருக்காது, இருந்தாலும் ப் தனித்து எழுதினாலும் இடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக அப்படி நாம் எழுதுவது கிடையாது.
உதாரணம்
திருநிறை செல்வன் -- என்பதை
திருநிறைச்செல்வன் என்று எழுதுவது போல
இரண்டை ஒன்றாக்கும் போது தான் ஒரு கப்ளிங் தேவைப்படுகிறது. தனியே இருக்கும் போது அது பாட்டுக்கு தனியே இருக்கும்.