போட்டியில் முதலிடம் பெற்ற இளஞ்சிங்கம் கண்ணன்60 அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த பிறைநிலா முதிர்கன்னி அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்து, மாய வலை வீசி மக்களின் மனதை கிறங்கடித்த மாகி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்....
இந்த நிர்வாக சவால் போட்டியை மிகவும் ஸ்மார்ட்டாக நடத்திய, ஸ்மார்ட் அவர்களுக்கும், பட்சியை போல் பறந்து பணியாற்றிய பச்சி அவர்களுக்கும் நன்றிகள்...
வெறும் 65 பேர்தான் ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்......ஓட்டுப்போட மிகவும் யோசிக்கும் நண்பர்களே!!!! ஒரு நிமிஷம் சிந்தித்துப்பாருங்கள்!!!! இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு, வெகுவாக சிந்தித்து, மூளையை கசக்கி, நாம் எழுதும் கதை நன்றாக வரவேண்டுமே என்ற எண்ணத்தில் கதை எழுதும் கதாசிரியர்களை ஊக்கப்படுத்த, எந்த வித செலவும் இல்லாமல் நமக்கு கிடைத்த இந்த சான்ஸை நழுவ விடலாமா?....அடுத்த வாக்கெடுப்பிலாவது தயவுசெய்து எல்லோரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று புதியவனான நான் உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்......எனக்கு கிடைத்த முதல் சான்ஸிலேயே நான் ஓட்டுப்போட்டு விட்டேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
நன்றி
|