Quote:
Originally Posted by கர்ணா
உண்மைய சொல்லுங்கள் நண்பரே பதிப்புகள் கதைகள் அதிகம் எழுதினால் பதவி உயர்வு என்பதால் தானே இத்தனை வேகமாக கதை எழுதுனீர்கள். பதவி உயர்வே ஒரு முக்கியமான நோக்கம் நன்பரே அதனால் தான் அந்த விதிமுறையே உள்ளது. அதை இங்கே யாரும் மறுக்க முடியாது.
|
இது தவறான வாதம் கர்ணா....
பதவி உயர்வுக்காக எழுதுவது என்றால் நான் எழுதுவதை கிட்டத்தட்ட ஒண்ணரை வருடங்களுக்கு முன்பே நிறுத்தி இருக்க வேண்டும்.
என்னை பொறுத்த வரை உங்களது பதில், சிவா என்ற உறுப்பினரின் கருத்தினை விமர்சனம் செய்யாமல் சிவா என்ற தனி மனிதனை விமர்சனம் செய்வது போலத் தான் நான் நினைக்கிறேன்.
எல்லோரும் அவரைத் திட்டும் முன் அவரின் வாதத்தில் இருக்கும் உண்மையை உணருங்கள். கதை எழுதுவது கஷ்டம் தான். நேரம் ஆகும் தான். எல்லோராலும் முடியாது தான். ஆனால் அதே நேரம் முதலில் தலை வாசலில் இருந்து தமிழ் வாசலுக்கு வருவதற்காக இருக்கும் வேகம் அதை அடுத்து அடுத்து பதவி உயர்வுகள் பெற்ற பின் இருப்பதில்லை. என்னால் பல உதாரணங்கள் காட்ட முடியும் தங்க உறுப்பினரான பின் மொத்தமாய் கதை எழுதுவதையே நிறுத்தி விட்டவர்களுக்கு. ஆனால் நான் அப்படிச் செய்தால் அது திரும்ப தனி மனித தாக்குதல் ஆகி விடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.
எனவே ஒவ்வொருவரும் எழுதுங்கள். விதி முறைகளை கடினமாக்க வேண்டும் என்பது சிவாவின் கருத்து. அது வேண்டாம் என்றால் அதை மட்டுமே பதியுங்கள். கடுமையான விமர்சனக்கள் வேண்டாமே...