Quote:
Originally Posted by Murattu Kaalai
ரொம்ப நாள் கழித்து வருகிறேன். இப்போது தான் முடிவுகளை பார்த்தேன். வித்தியாசமான வர்ணனை, கதை முடிவு கொடுத்தாக நினைத்திருந்தேன்.
ஆனால், 70 பேர் படித்து விட்டு 5 பேர் தான் வாக்களித்திருக்கிறார்கள் என்னும் போது இந்த கணக்கீட்டு முறையில் ஏதோ தப்பாக இருக்கலாம் அல்லது என் கதையில் கோளாறு இருக்கலாம்.. போல.,
இனி இதை தவிர்க்க பார்க்கிறேன்.
|
வாக்களித்தவர்கள் உங்கள் கதையைப் படித்தது போலவே மற்றவர்களின் கதைகளையும் படித்திருப்பார்கள். இதில் சிறந்த ஒரு கதைக்கு மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால் அவர்கள் சிறந்த தொடர்ச்சிக்கு வாக்களித்திருப்பார்கள். உங்கள் கதைக்கான பார்வைகளின் எண்ணிக்கையை வைத்து வாக்குகளை கணக்கிட கூடாது நண்பரே. கதையைப் படிப்பவர்கள் அனைவரும் நமக்கே வாக்களிப்பார்கள் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது.
மொத்தம் ஐம்பது பேர் வாக்களித்து இருக்கிறார்கள். அதிக தொடர்ச்சிகள் ( 11 ) வந்த காரணத்தால் வாக்குகள் சிதறி விட்டது.
இதில் ஐந்து பேர் உங்கள் கதையை சிறந்த தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். உங்கள் எழுத்தையும் கதை சொல்லும் திறனையும் இன்னும் மெருகேற்றினால் அடுத்த போட்டியில் வெற்றி பெறலாம்.