எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
ஜனவரி மாத நிர்வாக சவாலை வெற்றிக் கரமாக நடத்திய திரு.பசீர் அவர்களுக்கும், திரு.அசோ அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இந்த முடிவு மிக சந்தோஷமாக இருக்கிறது.
என்னை ஆரம்பம் முதலே நிர்வாக சவாலில் பங்கு கொள்ளும்படி தூண்டி வருபவர் என் நண்பர் பசீர் அவர்கள். ஏனோ அது தள்ளி கொண்டே போய் கடந்த மாதம் அதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு என் முதல் நன்றிகள். என்னை வெளியே கொண்டு வந்ததில் அவரின் பங்கு மகத்தானது.
கடந்த சவாலில் என் கையில் கயிற்றை கட்டி இறக்கி விட்டவர் திரு.விஜி அவர்கள். நான் இன்று நாலு பேருக்கு தெரிவதற்கு அவர் ஒரு முக்கிய காரணம். இந்த முடிவு கண்டிப்பாக அவருக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் நான் அவருக்கு கடனை திருப்பி செலுத்த முடியாது.
நான் வந்த நாள் எனக்கு அரவணைத்து ஆதரவளித்தவர் திரு. லலிதாதாசன். என் பார்வையை நேர்ப் படுத்தியவர். நன்றி நண்பரே.
கடந்த சவாலில் பங்கு கொள்ளாமல் இரண்டு பேர் நேரத்தின் மேல் பழியை போட்டு தப்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மலர் & மச்சான். அவர்கள் இந்த போட்டியில் பங்கு கொண்டு இருந்தால் நிச்சயமாக எனக்கு இந்த வெற்றி கிடைத்து இருக்காது. ஒரு வகையில் என் வெற்றிக்கு அவர்களும் காரணமே. என் எழுத்தை செம்மை படுத்தியதில் மச்சானுக்கும் பங்கு உண்டு. எனக்குள் ஒரு உத்வேகத்தை உருவாக்கியவர் மலர். இருவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.
சவால் எண் 42 சென்று கொண்டு இருந்த போது, இதில் நான் எழுத முடியுமா என தயங்கிய போது, என்னை உற்சாகப் படுத்தியவர் நண்பர் பில்லா. நன்றி தல.
இந்த வெற்றியை நான் என்னுடைய தனிப்பட்ட வெற்றியாக கருதவில்லை. இந்த வெற்றியை என்னுடன் போட்டியிட்ட சன்ரைஸ், தமிழன், மன்மதலீலை, மாறன், செம்பி மற்றும் தமிழ்கிளி ஆகியோரின் வெற்றியாகவே கருதுகிறேன். அனைத்து போட்டியாளர்களுக்கும் இந்த வெற்றி காணிக்கை.
எங்களின் அனைத்து பாகங்களையும் படித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும், கதையை படித்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் மிக்க நன்றி.
என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்கள் பசீர், மரியாசீர், சூப்பர் ஸ்டார், தமிழா, சன்ரைஸ், ஜாக், ரீனா, மாறன், ஹபீப், x man, மலர், மலர், லலிதாதாசன், மௌஸ், மன்மதலீலை, நைஸ்கை, மச்சான் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்த போகும் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
நன்றி.
|