அதர்ச்சி தந்த செய்தி, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சரானவர் இப்படி தீடிரென மரனத்தை சந்திப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எனக்கு பிடித்த தலைவர் என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை, சில சமயங்களில் இவர் செயல்பாடுகளால் கடுப்பாகி போனது உண்டு. அதே சமயம் அம்மா அவர்களின் சிறந்த பன்புகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
அவர் இறந்த பிறகு அவர் கடந்த வந்த பாதைகளை சந்தித்த போராட்டங்கள், துனிச்சல், வைராக்கியம் பற்றி பத்திரிக்கைகளில் வந்தது. இதுவரை நான் அறியாத அல்லது காலத்தால் மறந்து போன* பல விசயங்களை படித்த பிறகு அமரர் ஜெயலலிதா அவர்கள் எனக்கு மிக மிக பிடித்த தலைவராகி விட்டார் .
அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய லட்சோப லட்ச மக்களோடு நானும் கடவுளை பிராத்திக்கிறேன்.
|