Quote:
Originally Posted by sreeram
"று" என்பதே சரி.
இப்படி நினைவில் கொள்க.
பொறுத்தது ---> பொறுமை காத்தல்
பொருத்தியது---> Matching/Fixing
|
நானும் "று" என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனாலும் ஆங்காங்கே லாஜிக் இடிக்கிறதோ என்ற ஐயம் மனதில் அடித்தட்டில் தோன்றி மறைகிறது..
என் கருத்தைப் பொருத்தவரை .. என்பதில் matching ... fix ஆகிறது.
பின்னர் சேர்த்தது
கூகிளில் சென்று தேடியபோது கிடைத்தது....
என்னைப் பொறுத்தவரை, இந்த கருத்தைப் பொறுத்தவரை என்று இப்போது "பொறுத்தவரை" என்ற சொல்லைப் பயன்படுத்து கிறோம். இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப் படவில்லை.
as far as india is concerned என்பது போன்ற ஆங்கிலப் பதத்துக்கு பெயர்ப்பாக இது உருவாகி இருக்கலாம்.
இதன் பொருள் பொறுப்பு என்ற பதத்திலிருந்து வருகிறது. எனவே பொறுத்தவரை என்பது சரி. சிலர் இதை பொருத்தவரை என்று பயன்படுத்துகின்றனர். இது பொருட்பிழை தரும்.
ஆக்கம்: ✪சிந்தாநதி at 7:18 PM
பகுப்புகள்: பிழைகள்
8 மறுமொழிகள்:
ரவிசங்கர் said...
பொறுத்தவரை, பொருத்தவரை - இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
எண்ணிக்கை உயர்வு, கூடுதல் - இது போன்றவை எல்லாம் பலரும் சிந்தித்துப் பார்க்காதவை. நீங்கள் சுட்டிக் காட்டியதால் நினைவு வைத்துக் கொள்வேன்.
நீங்கள் வைத்திருக்கும் இலக்கண வழிகாட்டி நூலில் இது போன்று எடுத்துக்காட்டுக்கள் நிறைய இருந்தால் அவ்வப்போது தாருங்கள். ஒவ்வொரு இடுகையிலும் நூலின் பெயரையும் உசாத்துணை (reference) ஆகக் காட்டுவது விரும்பத்தக்கது.
March 13, 2007 1:21 AM
சாத்தான் said...
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 'பொருத்தவரை'தான் சரி என்கிறது. இந்த அகராதியைப் பின்பற்றுவது நல்லது என்று நினைக்கிறேன்.
March 25, 2007 2:44 PM