மறுபடியும் கையை விட்டு அள்ளியதைப் போல் கிட்டத்தட்ட பாதி வாக்குகளை பெற்று முதலிடம் பெற்ற அண்ணன் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிராமத்து நடையில் கதை எழுதுவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே என மறுபடியும் நிரூபித்துள்ளார்கள்.
அடுத்ததாக என்னோடு இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முறையும் அவர் நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சவால் ராஜாவாக வெற்றி பெற வாழ்த்துகிறேன். கண்டிப்பாக உங்களால் முடியும் நண்பரே..!!
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான கதைகளைக் கொடுத்த நண்பர்கள் கவிகே, ராம்ராஜ், கே அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் போட்டியைச் சிறப்பாக நடத்திய நிர்வாக நண்பர்கள், வாக்களித்தவர்கள், பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் அநபாயன் அவர்களை பாண்டியில் சந்தித்த போது "அண்ணே, போன வாசகர் சவால் மாதிரி நாம ரெண்டு பேர் தான் திரும்பவும் மொத ரெண்டு எடத்தப் புடிக்கப் போறோம்" னு சொன்னேன். நான் சொன்ன மாதிரியே நடந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். லோக நண்பர்களின் எண்ணவோட்டத்தை கணிக்க முடிந்ததில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
சென்ற வாசகர் சவால், இந்த நிர்வாக சவால் போல நாங்கள் (நான் + அநபாயன் அண்ணன்) இருவரும் இணைந்து மீண்டும் லோக நண்பர்களை மகிழ்விக்க விரைவில் வருகிறோம்.
நன்றி
|