மேற்பார்வையாளர் அவர்களின் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. அதற்கு எடுத்துக்கொண்ட சிரமத்திற்கும் மிக்க நன்றி. காமலோகத்தில் ஒரு பெண் உலவுகிறாள் என்றால் அவள் எதற்கும் தயாராக இருப்பாள் என்ற எண்ணம் சரியல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Quote:
Originally Posted by asho
நீங்கள் ஒரு பூங்காவில் உலா வரும் போது, பின் தொடர்ந்து வரும் ஒருவர் விசில் அடித்தால் அல்லது ஏய் என்று அழைத்தால் நாம் திரும்ப பதில் நடவடிக்கை செய்வதில் இருந்து அவரை தவிர்க்கலாம், நாம் சட்டை செய்யவில்லை என்னும் போது அவர் அத்து மீறினால் நாம் அவர் சட்டையை பிடித்து இரண்டு அறை விடலாம் அல்லது செருப்பை எடுத்து அடிக்கலாம். ஆனால் விசில் அடிப்பதே தவறு என்றோ அல்லது பூங்கா நிர்வாகத்தையோ குறை சொல்ல முடியாது.
|
இது சில நேரங்களில் சரியாக இருந்தாலும் பொதுவாக எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது. காரணம் பெண்கள் உடல் அளவில் அவ்வளவு வலிமையானவர்கள் இல்ல. தவிர இரக்க குணமே அவர்களுக்கு எதிராகவும் வேலை செய்கிறது.
ஓகே எழுத்திற்கு மட்டும் மதிப்பு தந்து எங்களுக்கு வேறு தொல்லைகள் இல்லாமல் இருந்தால்.எந்த ஒரு விஷயத்திலும் எங்களின் கருத்துக்களை அறிய முடியும்.
Quote:
Originally Posted by asho
இங்கே உங்கள் பிரச்சினையில் நீங்கள் வெளிப்படையா ஜெயா6 என்ற உறுப்பினர் பெயர் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் ஏதும் மரியாதைக்குறைவாக எழுதியாக தெரியவில்லை, அவர் நோய்வாய்ப்பட்டு இறுதிக்காலத்தை நாட்களில் மீதம் வைத்திருக்கும் ஒரு உறுப்பினர். அவர் தவறான அர்த்தத்தில் எழுதியாக தெரியவில்லை.
|
நண்பரின் நிலைக்கு வருந்துகிறேன். அவர் விரைவில் குணமடையட்டும்.
நான் தீபா. பெண். நான் பெண் பெயரில் இருக்கும் ஆணா என்ற வகையில் பதிவை ஏன் செய்யவேண்டும். அதை அறிவதில் என்ன ஆர்வம் லாபம். எழுத்திற்கு முக்கியத்துவம் உள்ள ஒரு தளத்தில் எழுதுவோரின் பாலினம் பற்றிய ஆய்வு எதற்க்கு?
சரி. மேற்பார்வையாளர் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். முதலில் ஆர்வமாக வந்தேன். இப்பொழுது சற்று குறைவு. பார்க்கலாம். நன்றி.