2011 புதியவர்கள் சேர்க்கை [முடிவுற்றது]
நண்பர்களே..
சென்ற வருடம் ஆகஸ்டு மாத துவக்கத்திலேயே நாம் புதியவர்கள் சேர்க்கையை ஆரம்பித்தோம் என்பதனால் பல புதியவர்கள் இப்போதே எனக்கு விண்ணப்பங்களையும், சென்ற வருட நுழைவுத் தேர்வு கேள்விகளையும் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்த வருடம் இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் ஒரு மாத கால புனித ரமலான் நோன்பு முடியும் வரை, புதியவர்கள் சேர்க்கை தள்ளிப் போடப் பட்டுள்ளது.
சரியாக கூற வேண்டுமென்றால், செப்டம்பர் 10-ம் தேதி முதல் புதியவர்கள் சேர்க்கை துவங்கும், அக்டோபர் 10-ம் தேதி முடிவடையும்.
2011-ம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கேள்விகள் இன்னும் சேர்க்கப் படவில்லை, ஆகஸ்டு 10-ம் தேதி இந்த வேலை முடிவடையும். அதன் பின்னரே புதியவகள் இந்த கேள்விகளுக்கு விடைகளைத் தேடுங்கள்.
பழைய உருப்பினர்களே! புதியவர்களை வரவேற்கவும், வித்தியாசமான புதிய படைப்புகள் பெறவும், மற்றும் அவர்களுக்கு வழிகாட்டவும் தயாராக காத்திருங்கள்!
நன்றி..!
|