மௌனி மீது அன்பு வைத்திருக்கும் தமிழ்ப்ளஸ், நைஸ்கை, சிரிராம், செல்லுடா, டுபுக், மாயகிருஷ்ணன் அனைவருக்கும் என் நன்றிகள் பல!
பல பிரச்சனை என்று சொல்ல மாட்டேன். ஒரு பிரச்சனைதான். அதனால் அவர் தன் சின்ன வயதிலேயே வீட்டு உறவுகளுடன் பிரிந்துள்ளார். கனடா சென்றும் சில காலம் இருந்துள்ளார். பின் ஃபரீதாபாத் வந்து தங்கி உள்ளார். அங்கும் அந்த பிரச்சனை தொடரவே செய்தது.
அதனால் அவர் கவனம் எழுத்து என்று திரும்பியுள்ளது. பல மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகையில் எழுத கடைசி வரை முயன்று இருந்ததை நான் கண்கூடாக அறிவேன். சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் அவர் முயற்சி செய்தார்.
காமலோகத்தையும், அவர் நண்பர்களையும் நேசித்தார். லோகத்தில் சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார். ராசு அண்ணா, ஜேகே என்று அவருக்கு நண்பர்கள் இருந்ததாக சொல்வார்.
எப்படியோ இறப்பில் அமைதியாக இருக்கட்டும் அந்த மகராசி.
|