Quote:
Originally Posted by Nallavan1010
இதையே இப்பொழுது "நெருக்கடி" என்ற சொல்லால் குறிப்பிட்டிருந்தேன். வாக்கெடுப்பில் தானே நெருக்கடி கொடுத்தீர்கள் என்று சொன்னேன். அது உங்களின் பிழை அல்ல என்பது அனைவருக்குமே தெரியுமே.
இது உங்களின் பாங்கு
மிகுதியால் மிக்கவை செய்தாரை தான் தன்
தகுதியால் வென்று விடல்
இதுவே என் பங்கு. வெளிப்படையாக சொல்லுகிறேன்
|
மிகவும் நன்றி நண்பரே தங்களின் நெஞ்சார்ந்த ஆய்வுக்கு !
தங்களுக்கு சிரமம் கொடுத்துவிட்டேன் என்பதை நினைக்கையில் கண்கள் பனித்தன!
பங்கு ,பங்கு வார்த்தை விளையாடல் இலக்கிய நயம் கொண்டது !
தங்களின் மேற்கோளாக அந்தப் பொல்லாத திருக்குறளும் நமது - பனி படர்ந்த சந்தேகங்களை - பிணையை களைந்து விட்டது என்பது திண்ணம் !
நம்முடைய மனங்களும் தெளிவு பெற்று விட்டன !