நண்பர் ஸ்திரிலோலன்,
உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி..! தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அனைத்து ஆலோசனைகளையும் நான் வரவேற்கிறேன்.
நீங்கள் வெகு காலம் தளத்திற்கு வராததினால், இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக உணர வாய்ப்பில்லை, அது உங்கள் தவறல்ல.
நமது தளத்தில் பல நட்பு வட்டங்கள் உள்ளன. அவை பல சமயங்களில் நல்லது செய்தாலும், அதில் சில தீமைகளும் உள்ளன.
இங்கு, சில சமயம் ஒருவரை வெற்றியாளராக்க பலர் பிண்ணணியில் பாடுபட்டு அவரை தங்க வாசல் அடைய வைக்கிறார்கள், அதன் மூலம் தரமற்ற கதை கூட வெற்றியடைய வாய்ப்புள்ளது. விருப்பமுள்ள திறமையானவரும் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். ஒருவர் தங்க வாசல் அடைய, நாம் நல்ல கதைகளை இழக்க வேண்டுமா? தரமற்ற கதையை வெற்றியடைச் செய்ய வேண்டுமா?
இங்கு நீங்கள் கூறுவது போல் "ஜாம்பவான்கள்" என்று யாரும் கிடையாது, எல்லோரும் வந்த புதிதில் கத்துக்குட்டிகள் தான், எழுத எழுதத் தான் அவர்களும் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்கள். அதற்கு முயற்சியும், உழைப்பும் தான் காரணம். அவை உங்களுக்கு இருந்தால் நீங்களும் விரைவில் அனைத்து வாசல்களையும் தாண்டலாம்.
சென்ற இரு வருடங்களாக இங்கே சேர்ந்த பலர் ஒரு மாதத்திலேயே, தங்க வாசலை தொட்டு விடுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். குறிப்பாக, வெண்கல வாசல், வெள்ளி வாசலில் புதைந்து கிடக்கும் முத்துப் போன்ற கதைகளை அவர்கள் எட்டிப் பார்க்க கூட நேரம் இல்லாமல், தங்க வாசலே தவம் என்று ஆகிவிடுகிறார்கள்.
நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பல முறை ஆராய்ந்து தான் எடுக்கிறோம், அதன் பின் பல "உள் நோக்கங்கள்" இருக்கும், அந்த உள் நோக்கம், நம் தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதும், உறுப்பினர்களை ஊக்கப் படுத்துவதும் தான், அவர்களை கஷ்டப் படுத்த அல்ல. இன்று உங்களுக்கு கடினமாக உள்ளவை, விரைவில் நல்லவையாகத் தெரியும்.
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
நேரடித் தங்க வாசல் அனுமதி நடைமுறையைத் நிறுத்த வேண்டாம். ஆனால் பதிப்புகளின் எண்ணிக்கைகள் மூலம் தங்க வாசல் அடையாதவர்களுக்கு (மாதாந்திரப் போட்டி வெற்றி மூலம் அடைந்தவர்களுக்கு) அதை தக்க வைத்துக் கொள்ள சற்றுக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வரலாம். [உ-ம் வருடத்திற்கு 100 தமிழ் (அசைபடம், படம் ஃபோரம்களில் சேராத) பதிப்புகள், வருடத்திற்கு 2 கதைகள், அதிக நாட்கள் லீவ் சொல்ல முடியாது, எக்ஸெட்ரா எக்ஸெட்ரா]
========================
அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்... அதுவும் இப்போதைய புதிய அறிவிப்பால் அந்த மாதிரிப் போட்டிகளில் ஜாம்பவான்களின் பங்களிப்பு அதிகமாகி புதியவர்கள் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் --- அது நல்லதே, வரவேற்கக்கூடியதே, அது பலப் புதிய முயற்சிகளையும் அதன் மூலம் இதுவரையில்லாத மிக மிகச் சிறந்த படைப்புகளும் நமக்குக் கிடைக்கலாம்... ஆனால் அதற்கு அப்புதியவர்களுக்கு கிடைக்கும் பரிசும் சிறப்பானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து...
நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள் தலைவரே...
|