View Single Post
  #18  
Old 30-01-15, 03:00 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
தில் ஒரு சின்ன சந்தேகம் அனைத்து 'ட்'+உயிரெழுத்துக்கும் முன்னால் மூன்று சுழி ண் தான் வருமா? அல்லது ஏதாவது எழுத்துக்கு இரன்டு சுழி 'ன்' உம் வருமா? இது எனக்கு ரொம்ப நாள் குழுப்பமாக இருக்கிறது.
Quote:
Originally Posted by குரு View Post
ஆமாம் வாத்தியார். எந்த டண்ணகரத்தின் முன்னாலும் ணகரம் தான் வரும். இது தமிழின் மாறாத விதி.
நண்பர் ஓல்வாத்தியார் அவர்களின் சந்தேகம்போல் எனக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. நண்பர் குரு கூறியது சரிதான் என்றாலும் என் சந்தேகத்தைக் கூறுகிறேன்.

"அதை ஏன் பார்த்தாய்..?" இது ஒரு கேள்வி வாக்கியம். இதையே ஒரு ஆணிடம் கேட்பதுபோல் (பெண்ணிடமும் கேட்கலாம்.. ஒரே பொருள்தான் வரும்) மாற்றிப்பார்க்கலாமா..?

"அதை ஏண்டா பார்த்தாய்..?" வாக்கியம் இப்படி வரவேண்டுமா அல்லது "அதை ஏன்டா பார்த்தாய்..?" என இப்படி வரவேண்டுமா..?

"ஏன்" என்பதில் உள்ள இரண்டு சுழி 'ன்' மூன்று சுழிக்கு மாறினாலும் அதே அர்த்தம்தான் தருமா..?
Reply With Quote