மனிதம் தழைக்க,
மனிதம் நிலைக்க,
தேவை காமம்....!
ஜடத்திலிருந்து மனிதனை....
பிரித்து உயிராய் ஆக்க
தேவை காமம்....!
இவ்வுலகில் நம்மினம்
நிலைபெற.....
தேவை காமம்...!
சாதிமத பேதமின்றி
ஆதி முதல் அந்தம் வரை
அனைவருக்கும் தேவை காமம்...!
காமம் இல்லாவிடில்....
இயக்கமில்லை,
இன்பமில்லை,
உறவுகளில்லை,
இன உற்பத்தி இல்லை....
மொத்தத்தில் தேவை காமம்
மனிதம் தழைக்க...
மனிதம் நிலைக்க....!
காமம் ச்சீ... யென்றவரிடம் கேட்டுப்பார்...
காமமில்லாவிடில் அவர் இந்த உலகினைப் பார்த்திருக்க முடியுமா?
காமம் தேவை என்பதால்
வள்ளுவன் கூட அதிகமாய் குறள் தந்தான்...!
காமம் தேவை என்பதால் பாறைகள் கூட
அஜந்தா எல்லோரவாய் மாறின...!
காமம் தேவை என்பதால்தான்
ஆதி கூட லிங்கமானான்.....!
மதம் கொண்ட மதங்கள் கூட
காமத்தை வெறுத்ததில்லை...!
காமத்தில் பல கவிதை காணலாம்....
காமத்தில் கடவுள் பல காணலாம்....
அளவாய் காமத்தோடு நலமாய் வாழ்வோம்...!
காற்றுக்கு கடிவாளமிட்டதைப்போல்....
காமத்திற்கு கடிவாளமிட்டு,
கண்ணியத்தோடு அலசும்....
எங்கள் காமலோகமே....
உனக்கு எங்கள் வாழத்து...!
|