Quote:
Originally Posted by Revathi90
பத்தாவது பாகத்தின் லிங்கை அணைத்து பாகத்திலும் குடுக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதை 9வது பாகத்தில் மட்டும் குடுத்தால் போதுமானது...
உதாரணமாக ஒருவர் உங்கள் கதையின் ரெண்டாவது பாகத்தை படித்து விட்டு, பத்தாவது பாகத்தை தேட போவதில்லை, 9 வது பாகம் படித்த பின்பு தான் 10வது பாகத்தை தேடுவார்...சோ...ஒரு பாகத்தின் லிங்க் அதன் முந்தய பாகத்தில் மட்டும் இருந்தால் போதுமானது.
|
நல்ல, சரியான பதில். 500 இபணம் அளிக்கிறேன்.
ஒவ்வொரு கதையையும் எழுதும் எழுத்தாளர், அடுத்த பாகத்தை எழுதியவுடன் முந்தைய பதிப்ப்பை எடிட் செய்து கடைசியில் அடுத்த பாகம் (முடிந்தால் எண் குறிப்பிட்டு) அந்த லிங்கை இட்டு சென்றால் போதும். கதை படிப்பவர் விரைவில் அடுத்த பாகம் சென்றடைவார்.
முந்தைய பாகம் பதிந்ததில் இருந்து 30 நாட்கள் வரை தான் எடிட் செய்யும் வசதி இருக்கும், அதற்குபின் அடுத்த பாகம் பதிந்தால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பராவாயில்லை. நிர்வாக உறுப்பினர் ஒருவர் (நிர்வாக ஆலோசகர் காஞ்சனா தாசன்) மெதுவாக கண்டு சேர்த்து வருவார்.
அப்படி யாரும் சேர்க்கவில்லை என்றாலும், கதை படிப்பவர்கள் அந்த கதை எழுதியவர் பெயருக்கு எதிர்புறம் இருக்கும் மைதிரட்ஸ் (ஆங்கிலத்தில்) இருப்பதை கிளிக் செய்தால் சமீபத்திய கதைகள் எல்லாம் அதில் பட்டியலாக தெரியும் எனவே கதை எழுதுபவர் ரெம்ப மெனக்கெட்டு அதனை கதை படிப்பவருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை.
முழுக்கதையும் எழுதி முற்றும் போட்ட பின் இந்த கதை லிங்க் எல்லாம் இட விரும்பினால், நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு ( அல்லது எனக்கு) தனிமடலிட்டு சொன்னால் விரைவில் அனைத்து பாகங்களிலும் அந்த கதைகளுக்கான அனைத்து சுட்டிகளும் இட்டு புதுப்பித்து விடுவோம்.