View Single Post
  #514  
Old 28-05-21, 10:57 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,461
My Threads  
எல்லா திரிகளுக்கும் பின்னூட்டம் இட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படித்துப்பார்த்து பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என்று தோன்றும் போது பதிந்தால் போதும்.

ஆனால் சிலர் கருத்துக்கள் பதிந்து பதிப்புகளின் எண்ணிக்கையை கூட்டி அடுத்தடுத்த வாசல் அனுமதி பெற விரையும் நபர்களால் தான் பிரச்சினை.

கல்யாணத்திற்கு முன் காம அனுபவம் இருந்திருக்கிறதா என்ற திரியில் எப்போது வேண்டுமானாலும் பின்னூட்டமிடலாம். ஆனால் 2010ம் வருட புதுவருட திரியில் இப்போது பின்னூட்டமிடுவது சரியா?. அதே போல நடிகர் விசு மறைந்து விட்டார் என்ற திரியில் சென்று அஞ்சலி செலுத்துவதாக பதிவது அர்தமற்றது, ஆனால் அவர் எனக்கு தனிப்பட்ட வகையில் தெரியும் அவரால் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது என்பது மாதிரி சுவராஸ்மான விசயம் இருந்தால் பின்னூட்டமிடலாம்.

என் குழந்தைக்கு நல்ல பெயர் சொல்லுங்கள் என்ற திரியில் 10 வருடம் கழித்து வந்த உறுப்பினர் நான் இப்போது தான் பார்க்கிறேன் என்று பெயரிடுவது அபத்தம் இல்லையா?.

அந்த திரியை படிக்கும் போதே, ஆறாவது அறிவு துனைக்கொண்டு பின்னூட்டமிட்டுவதா வேண்டாமா என்று தெரிந்து கொள்ளலாம். சில கருத்து மெசின் ரோபோக்கள் தான் திறக்கும் அனைத்து திரிகளிலும் திறந்ததை சாக்காக வைத்து கருத்து பதிந்து செல்கின்றனர். அதனையே தவிர்க்க சொல்கிறோம்.

ஆனால் கதைகள் /சிரிப்புகள்/கவிதைகளுக்கு பின்னூட்டமிட ஏதும் தடை இல்லையே, எப்போது வேண்டுமானலும் பின்னூட்டமிடலாம்
__________________
Reply With Quote