இந்திய நேரப்படி இந்த 62வது சுந்தந்திர தினத்தன்று நான் காமலோகத்தில் இருக்கேறேன். இதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி. தாய்நாட்டை விட்டு பிழைப்பிற்காக வெளிநாடு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்குத்தான் தாய்நாட்டின் அருமை அதிகம் தெரிகிறது. அங்கே இருக்கும்போது இந்தியா, இந்தியன் என்ற எண்ணம் பெயரளவில் தான் இருந்தத். ஆனால் வெளிநாட்டில் இருக்கும்போது இந்தியன், இந்தியா என்று கேட்டவும் திரும்பிபார்க்கும் அளவிற்கு அதன் தாக்கம் வந்துவிடுகிறது. அதுமட்டும் அல்ல சில இடங்களில் பார்த்தால் ஒரே அறையில் இந்தியன், பாக்கிஸ்தானி, பங்காளி, ஸ்ரீலங்கன் இப்படி அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். ஒரே கேம்ப்பிள் ஒன்றாக இருப்பார்கள்.
இந்த ஒற்றுமை ஒவ்வொரு இந்தியனிடமும் இந்தியாவில் இருக்க வேண்டும். அன்டை நாட்டான் அடிக்க வருகிறான் என்றபோது மட்டும் நமக்குள் ஒற்றுமை வருகிறது, ஒரு போர்க்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு, இயற்கையின் சீற்றத்திற்கு எல்லோரும் ஒன்றினைந்து உதவி செய்கிறோம். ஆனால் சாதாரன நாட்களில் இது நம்மிடம் இல்லை. இதுபோல சமயத்தில் மட்டும் ஒற்றுமையுடன் இல்லாமல் எல்லா நாட்களிலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
நமது நண்பர்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும், காமலோகம் சார்பாகவும் சுதந்திர வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்
|