தோழர் பில்லா.
எங்கே இருக்கிறீர்கள். இந்த வெற்றி உங்களால் அல்லவா. என் தயக்கத்தையும் மீறி, என்னாலும் முடியும் என்று ஊக்கம் கொடுத்து பங்கேற்க வைத்தவரல்லவா நீங்கள். அது மட்டுமல்லாமல், தங்க வாசலில் சந்திப்போம் என்று எனக்கே என் மீது இல்லாத நம்பிக்கையோடு கூறியவரல்லவா நீங்கள். நல்லோர் வாக்கு பொய்க்காது என்பார்கள். நான் பலமுறை சொன்னதுபோல நீங்கள் நல்லவரே. அதனால் தான் உங்கள் வாக்கு பொய்க்கவில்லை. என் மனமார்ந்த நன்றி.
தோழர் தங்கர்,
ஆழ்ந்த ரசனையோடு என்னை பாராட்டி வருபவர் நீங்கள். அனுபவ முதிர்ச்சியோடு, நிறைகளை பாராட்டி, சிறந்தஇலக்கண ஆசிரியர்போல்குறைகளை மனம் புண்படாவண்ணம் கனிவாக சுட்டிக்காட்டும் உங்கள் பண்பை நான் எப்போதும் வியந்து, மகிழ்ந்து அனுபவிப்பேன். இந்த தொடர் பாகங்களிலும், நீங்கள் சுட்டிக்காட்டிய சிறு பிழைகளை நான் உணர்ந்த அளவிற்கு திருத்தி அமைக்க வழிகாட்டிய உங்களுக்கும் என் நன்றி.
தோழர் அசோ,
முதல் பாகத்தில் நீங்கள் காட்டிய அக்கறையே எனக்கு மகிழ்வாக இருந்தது. இப்போதைய தனி மடலால் அளித்த அங்கீகாரத்திற்கும் சேர்த்து என் நன்றி
போட்டியில் பங்கேற்ற தோழர்கள் அனவருக்கும் என் பாராட்டுகளும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.
என்னையும் என் கதையையும் ஆதரித்து வாக்களித்த அனைத்து தோழர்களுக்கும். படித்து ரசித்து வாக்களிக்க மறந்த தோழர்களுக்கும் என் நன்றி.
நல்ல ஒரு குடும்பமாக கலந்து பழக, கருத்து சுதந்திரத்தோடு வலம் வர ஒரு ஆரோக்கியமான தளத்தை ஏற்படுத்தி, தலமையேற்று நடத்திவரும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.
அனவருக்கும் வணக்கம்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Quote:
Originally Posted by anusuya
சவால் போட்டியில் வெற்றி பெற்ற முதிர்கன்னிக்கு என்னுடைய பாராட்டுக்கள்...நான் அறிவித்திருந்த முதலில் சவால் கதையை முடித்தவருக்கான 500 இபணங்களும் முதலில் இறுதிப் பாகத்தை சமர்ப்பித்த முதிர்கன்னிக்கே வழங்குகிறேன்...வாழ்த்துக்கள்...
போட்டியில் இரண்டாமிடம், மற்றும் மூன்றாமிடம் பெற்ற காமன், ஹபீப் ஆகியோருக்கும் மற்றும் பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....
|
நன்றி தோழியே. தங்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகளை ஏற்கெனவே கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இப்போதைய பாராட்டுக்கும் பரிசுக்கும் என் நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
(அடுத்தடுத்த இரு பதிவுகள் இணைக்கப்பட்டது.... 100 இபணம் அபராதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது....(கொடுத்தவுடனேயே அதில் சிறிது எடுக்க வைத்து விட்டீர்களே...ஆர்வத்தினால் அப்படிசெய்து விட்டீர்கள் என்று நம்புகிறேன்...அடுத்த முறை கவனமாக இருங்கள்...அனு...)