நண்பர் சூப்பர்மேன் அவர்கள் கட்டண உறுப்பினராக இருந்தாலும் அவர் தளத்திற்கு ஆற்றும் பணிகள் அளப்பரியது. அவர் இப்பொழுது தந்திருக்கும் இந்த ஆலோசனையும் புதிதாக கதை எழுதுபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. புதிதாக கதை எழுதுவதற்கு ஆலோசனை சொல்வதற்காகவே ஏற்கனவே இங்கே நிறைய திரிகள் இருக்கின்றன. எனினும்இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நண்பர் சூப்பர்மேன் தந்திருக்கும் ஆலோசனைகள் புதிய உறுப்பினர்களுக்கு பல சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். அவரது சேவைக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும். என்னைப் பொருத்தவரை நான் காமகதைகளுக்கு என்று சில வரையறைகளை வைத்திருக்கிறேன். இந்த வரையறைகளை ஏற்கனவே ஒரு நண்பர் வேறொரு இடத்தில் தந்திருந்தார். அது என்னவெனில்
சாதரண கதை என்பது ஒரு மிக சிறந்த களம். அது சிறுகதையோ நாவலோ எதுவாயினும் அதை முறையாய் பயன்படுத்தி அழகான கதைக்களம் , அருமையான கதாபாத்திரங்கள் , இனிமையான உரையாடல்கள் , உணர்வை கிள்ளும் சூழ்நிலை இவை அனைத்தும் கலந்த அருமையான கதையாக இருந்து அந்தக் கதையை படித்தால் அந்த கதையிலிருந்து வெளிவர சில நாட்களாவது ஆகும். அதே சமயம் பெரும்பாலான காம கதைகளில் கதையாசிரியர்கள் ஒரு பாகத்தில் ஆணையும் பெண்ணையும் வர்ணித்துவிட்டு அடுத்த பாகத்தில் அவர்கள் கட்டிலில் என்ன செய்தார்கள் என்பதை பல பாகத்திற்கு வக்கிரமாய் , விரசமான, மனதிற்கு ஒட்டாத வார்த்தைகளை வைத்து பக்கம் பக்கமாய் எழுதி தள்ளுவார்கள். இந்த மாதிரியான கதைகளைப் படித்து யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.
அழகான பாலுணர்வை தூண்டும் கதைக்களம் , கதை சூழ்நிலை , மனதைத்தொடும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் , அதிலும் குறிப்பாக பெண்கள் பாத்திரங்கள் , மற்றும் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உணர்வுபூர்மான உரையாடல்கள் , கதைக்குள் வரும் கண்ணீர் துளிகள் , தயக்கங்கள் , மனப்போராட்டங்கள் , தாபம் , சபலம் , கோபம் , கொஞ்சம் சதை , நிறைய கதை எல்லாம் கலந்து அடுத்து என்ன? என்ன? என்று நகம் கடித்துப் படிக்க தூண்டும்படியான கதைகள் மிகவும் சொற்பம். ஒரு காமக்கதையின் ஒவ்வொரு பாகத்தையும் படித்து முடிக்கும் போதும் நம் நாக்கில் ஒரு துளி தேனை வைத்தது போல் ஒரு தித்திப்பை , சிலிர்ப்பை , உடல் சூட்டை மென்மையாக ஏற்றவேண்டும். ஆர்வமாய் அடுத்த பாகத்தை தேட வைக்க வேண்டும்.
அழகான காமக்கதைக்கான பொதுவான அளவுகோல் எது என்றால் ஒரு பெண்ணால் அருவருப்பில்லாமல் ஒரு புண் சிரிப்புடன் ஈடுபாட்டோடு ஒரு கதையை முழுதாக படிக்க முடிந்து அதன் முடிவில் அவளுக்கு காம தாகம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த காமக்கதை.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|