காமலோகம் கதை படிக்க மட்டும் இல்லை. இந்த தளம் முகமறியாதவர்களுடன் முகம் தெரியாமல் நட்பாகவும் இருக்க வைப்பதோடு தைர்யம் இருப்பவர்களுக்கு முகம் தெரிய வைக்கும் தளமாகவும் உள்ளது. எனக்கு இந்த தளம் வெகு அற்புதமான மனிதர்களை நட்பாக்கியது என்றால் அது மிகையில்லை. என்றென்றைக்கும் மரியாதைக்குரிய காஞ்சனாதாசன், கூப்பிட்ட குரலுக்கு கணனியில் ரிப்பேர் என்றால் ஓடி வந்து உதவும் நண்பர் அசோ, அன்னிய தேசத்திலிருந்தாலும் உதவி என்றதும் மறுபேச்சில்லாது செய்த ஆதி, விருந்தோம்பலில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது என்று நெஞ்சை நிமிர்த்தி வரும் பில்லா(இப்போது எங்கு இருக்கிறார் என்று யாராவது கண்டு பிடித்து தாருங்களேன்
), நான் சென்னையில் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று தொடர்பு கொண்டால் அடுத்த 15 நிமிடத்தில் நேரில் வந்து அலைத்துச் செல்லும் திரு. ராசு அவர்கள், ஒரு நிலப்பிரச்சனையில் ஒருவருடமாய் அலையாய் அலைந்து வெறுத்துப் போயிருந்த நேரத்தில் என் ஊர்க்காரர் என்பதற்காக என் அலைபேசிக்கு மதிப்பளித்து இரண்டே மாதத்தில் அந்தப் பிரச்சனையை வெற்றிகரமாய் முடித்துக் கொடுத்த நண்பர் முரட்டுக்காளை(வழக்கறிஞர்) என இன்னும் பல நண்பர்களை இந்த தளம் எனக்கு பரிசாய் தந்திருக்கிறது. வேறு எந்த தளத்திலாவது இப்படி நாம் நண்பர்களை பெற முடியுமா? நானும் இந்த தளத்தின் அங்கத்தினர் என்பதில் பெருமை கொள்கிறேன்.