என் மனைவியும் நானும் காரில் பயணிக்கும் போதெல்லாம்
“ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!”
என்ற பாடலை போடுங்க மச்சான் என்று என்னை வற்புறுத்தி மீண்டும் ரிப்பீட்டாக கேட்டு ரசித்தபடியே பயணிப்பாள்..!
நா. முத்துக்குமார் அவர்கள் எழுதிய இந்த பாடலின்மீது அவ்வளவு அலாதி பிரியம் அவளுக்கு..!
குறுகிய காலத்தில் இரண்டு தேசிய விருது பெற்றவர். 41 வயதில் மரணம். அவர் மனைவி கையிலோ 8 மாத கைக்குழந்தை..! மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அன்னாரின் மறைவு அவரின் குடும்பத்தார்க்கும் தமிழ்ப்பட உலகுக்கும் மிகப் பெரிய இழப்பேயாகும்.
|