View Single Post
  #8  
Old 02-10-14, 07:02 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,669
My Threads  
என் வெற்றிக்கு காரணமான நண்பர்களுக்கு நன்றி.

இந்த சிறப்பு நி.சவாலின் சிறப்பே ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக கதை எழுதியிருந்தார்கள். எங்கே எல்லா கதைகளும் ஒரே மாதிரியாக இருந்து விடுமோ என்று நினைத்த எனக்கு ஆச்சரியம்தான் காத்திருந்தது.
Quote:
Originally Posted by subbu2000 View Post
ஒரு கருவுக்கு எத்தனை விதமான கதைகள்….. வாவ்…. எந்த பத்திரிக்கையும் கையாளாத புது டெக்னிக், எழுத்தாளர்களூக்கும் இது ஒரு “பட்டறை” போல அமைந்து விட்டது.
நண்பர் சுப்பு மிகவும் அழகாகச் சொல்லிவிட்டார்!

சூடான வாதங்களை கொடுத்து கோர்ட் சீனை அமர்க்களம் பண்ணி இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் நல்லவனுக்கு என் பாராட்டுகள்.

கிளைமேக்ஸில் 'கத்தியை கையில் எடுத்தவன் கத்தியால் சாவான்' என்றக் கூற்றை கொண்டு வந்து வில்லனை அழித்து மூன்றாம் இடத்தை பெற்ற நண்பர் ரா.ரா.வுக்கு என் பாராட்டுகள்.

நான் ஒரு முறை கதை எழுதியப்போது வில்லனை தப்பிக்க வைத்தேன். அப்போது டிரீமர் அண்ணா "ஊஹும் இது சரியில்லை. கதையிலாவது வில்லன்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்று சொல்லி கதையை மாற்றி பதிக்கச் செய்தார். அது நினைவுக்கு வரவே பழி வாங்க இரண்டு கொலைகளைச் செய்த நளினியை (கொஞ்சம் சோகமாக இருந்தாலும்) மரணத்தை தழுவ செய்தேன். அது நண்பர்களுக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறேன்.

இந்த சிறப்பு சவாலில் வாக்களித்து எனக்கு வெற்றிக் கனியை கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.

போட்டியில் பங்கேற்ற மற்ற படைப்பாளிகளுக்கு என் வாழ்த்துகள்.

இப்போட்டியில் பங்கேற்ற கதைகளை பற்றி இன்னும் நிறைய எழுத விரும்புகிறேன். நண்பர் அநபாயன் ஆரம்பிக்க இருக்கும் திரியில் சொல்கிறேன்.

இன்றுதான் (28-11-2010) முதல் நி.சவால் போட்டியில் ஜெயித்தது போல இருக்கிறது. ம்.. ம்.. நி.சவாலில் பத்து முறை வெற்றி. நான் கொஞ்சமும் நினைத்து பார்க்காத ஒன்று. மீண்டும் நண்பர்களுக்கு நன்றி!
Reply With Quote