மீண்டும் ஒரு விருது மனசை உற்சாகப்படுத்துகிறது...விருதுகள் நம்மை இன்னும் நிறைய பேருக்கு தெரியப்படுத்துகின்றது...வாசகர் வட்டம் விரிவடைய வழிகிடைக்கின்றது.
இந்த கதை எழுதும் போது குறிப்பிட்ட சில நண்பர்கள் தொடர்ந்து பின்னூட்டங்களை இட்டு கொண்டே வருவார்கள்...அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகள்...சிலரின் பின்னூட்டங்கள் மனசுக்கு அத்தனை நிறைவாக இருக்கும்...சில பின்னூட்டங்கள் நம் கதையின் சில நுணுக்கமான விசயங்களை சிலாகித்து...
இவர்களின் ஊக்குவிப்பிலேயே கதை 50 பாகங்கள் சென்றது...அதன் தொடர்ச்சியாக இன்னொரு கதை ஆரம்பித்து சென்று கொண்டிருக்கிறது.
ஒரு எழுத்தாளன் தன் மன அவசங்களுக்காகவே எழுதுகிறான்...அந்த அவசங்கள் பிடிப்பவர்கள் அதனை சிலாகிக்கிறார்கள் எனினும் முதல் வாசகன் அந்த எழுத்தாளனே...அவன் எழுத்துக்கு மேடையும் அமைத்து கொடுத்து பார்வையாளர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து...பரிசுகளையும் அள்ளி.கொடுக்கும் காமலோகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்...
இந்த லோகம் ஒரு சிறந்த பயிற்சி பட்டறை...நம் கதைகளுக்கான பின்னுட்டங்களும்....பிறர் கதைகளும் நம்மை ஊக்க படுத்தி நம் எழுத்தை மெருகேற்றும்...சில உத்திகள்...சில ஊக்கிகள் பலரின் கதையிலிருந்தும் கிடைக்கும்...அதற்க்காகவே தளத்தின் கதைகளை படித்து கொண்டே இருப்பேன்..
வாக்களித்த...பின்னூட்டமிட்டு அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...
அடுத்தடுத்த பரிசுகளை பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
__________________
அன்புடன் சுப்பு 2000
|