View Single Post
  #1  
Old 01-06-08, 10:22 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,236
My Threads  
முதல் சித்திரக் கதை போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

நமது தளத்தில் சோர்ந்துள்ள சித்திரக்கதை பகுதியை சுறுசுறுப்பாக சித்திரக் கதை (படக்கதை) போட்டிக்கு ரெடியா?, என்ற நமது நிர்வாகியின் திரி மூலம் சித்திரக்கதைக்கான வருடாந்திர போட்டி புதிதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி போட்டியில் பங்கேற்ற கதைகளில் சிறந்த முதல் 3 இடத்தில் வந்த கதைகளை நமது நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து, பின்னர் பொது வாக்கெடுப்பிற்கு சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்க போட்டி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

மூன்றாவது இடத்திற்கு இரண்டு கதைகள் ஒரே மதிப்பென் பெற்றதால் அவை இரண்டுமே போட்டிக்கு சேர்த்து மொத்தம் 4 கதைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்தப் போட்டியில் மொத்தம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 99 பேர், அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றிகள்.

அந்த போட்டியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெயரும், அவர்கள் பெற்ற வாக்குகள் விவரங்கள் இதோ:

1) cembi.. .. .. .. 35 வாக்குகள்

2) பில்லா .. .. .. ..30 வாக்குகள்

3) கமல் .. .. .. .. ..20 வாக்குகள்

4) xmanmathan.. .. ..14 வாக்குகள்


cembi இந்த போட்டிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் தந்தாலும் அவரின் முன்னொருநாள்.. முழுமதியில் ஒரு முதலிரவு! என்ற கதை தான் போட்டியில் வென்றது.

வெற்றி பெற்ற உறுப்பினர் cembi-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் வெற்றிக்கு பரிசாக சிறந்த சித்திரக்கதை மெடலையும், 1000 ஐகேஷ் வெகுமதி பெறுகிறார். இவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராகவும், காமலோகம்.அமையில் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் இடத்தில் உள்ள பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள், 500 இபண வெகுமதி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

முன்றாம் இடத்தை பிடித்த கமல் அவர்களுக்கு வாழ்த்துக்கள், இவருக்கு 300 இபணம் வெகுமதி அளிக்கப்படுகிறது.

இந்த போட்டி குறித்து அறிவிக்கப்பட்ட நிர்வாகியின் அறிவிப்பு திரியின் படி போட்டியில் கலந்து கொண்ட் அனைவருக்கும், அவர் ஜூனியர் மெம்பராக மட்டும் இருக்கும் பட்சத்தில் வெண்கலவாசல் அனுமதி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு கதைகள் படைத்தவர்களில் nxixsxax என்பவரை தவிர எல்லோரும் முன்னரே வெண்கலவாசல் அனுமதிக்கு மேல் பெற்றிருப்பதால், nxixsxax என்பவருக்கு மட்டும் வெண்கல வாசல் அனுமதி வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வருடாந்திர போட்டிக்கான சித்திரகதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...


பின் குறிப்பு :
இந்த போட்டி வாக்களிப்பு திரியை பார்த்து, ஆனால் வாக்களிக்காத நண்பர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தலைமை நிர்வாகி வசம் தரப்படும். அடுத்தடுத்த போட்டிகளில் வாக்களிக்காதவர் அனுமதி குறைப்பு செய்யப்படும். இனி தளத்தில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து வாக்கெடுப்பு போட்டிகளும் அவசியம் உள்நுழைபவர் பார்த்து செல்லும்படி செய்யப்படும்.
__________________